தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையராக கலை அரசி, கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலராக சம்பத், நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநராக ஜான் லூயிஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிறப்டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சிறப்புச் செயலாளராக சரவண வேல்ராஜூவையும், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குநராக சிவராசுவையும் தமிழக அரசு நியமித்துள்ளது.