விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே 100 நாள் வேலை திட்ட பணியாளர்களிடம் தலா 200 ரூபாய் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆவியூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பணிகள் சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வருகின்றன. அதற்காக, பணியாளர்களிடம் 200 வசூலிக்கப்படுவதாகவும், பணம் தராவிட்டால் வேலை மறுக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.