மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ககன்யான் 4-வது கட்ட என்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து விண்ணில் விண்கலம் செலுத்துவதற்கு தேவையான கிரையோஜெனிக் எஞ்ஜின், விகாஷ் எஞ்ஜின், பி.எஸ்.4 எஞ்ஜின் தயாரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் ராக்கெட்டுகளில் மனிதன் விண்ணிற்கு சென்று விட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவதற்காக எஸ்.எம்.எஸ்.டி.எம். என்ற மாடல் எஞ்ஜின் சோதனை பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது.
அதன்படி 4-வது கட்டமாக 130 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதற்கான கவுண்ட்டவுன் ஆரம்பிக்கப்பட்டு சோதனை வெற்றியடைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.