திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 8-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
உலகப்புகழ்பெற்ற இக்கோயிலில் வரும் 7-ம் தேதியன்று குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெறவுள்ளது.
அதை முன்னிட்டு கோயிலின் ராஜகோபுரம் கீழ்ப் பகுதியில் வேள்வி குண்டங்கள் அமைக்கப்பட்டு 12 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
8-ம் கால யாகசாலை பூஜையில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.