பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நீக்கியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.
அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ், அன்புமணி செயல் தலைவர் பதவியை ஏற்று பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.
இருவரும் பொறுப்பாளா்களை நியமிப்பதும், நீக்குவதும் கட்சியினர் மத்தியில் குழுப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பாமகவின் நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், புதிதாக 21 பொறுப்பாளர்களை நியமித்து நிர்வாகக்குழு பட்டியலை ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி, அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி, எம்எல்ஏ அருள், ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் நிர்வாகக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.