சென்னையில் நடைபெற்ற .பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின், பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பங்கேற்றார்.
தியாகராய நகரில் பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீ-யின் பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்வு மற்றும் அவரது தந்தை முருகவேலின் நினைவு நாளையொட்டி திருவுருவப்படம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமசிவாயம், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருபாகரன் கலந்து கொண்டனர். இதனைதொடர்ந்து முருகவேலின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.