வார விடுமுறையையொட்டி ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள், குடும்பம் குடும்பமாக படகு சவாரி செய்து பொழுதை கழித்தனர்.
ஏற்காட்டில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள், அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஏரி பூங்கா, பகோடா பாயிண்ட், கரடியூர் காட்சிமுனை போன்ற இடங்களை கண்டு இயற்கையின் அழகை ரசித்து வருகின்றனர். அங்குள்ள படகு இல்லத்தில் திரண்ட சுற்றுலா பயணிகள், படகு சவாரி செய்வதிலும் ஆர்வம் காட்டினர்.
கூட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாக, படகு சவாரிக்கு 3 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றுலா பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.