உத்தரப்பிரதேசத்தின் அலிகார் பகுதியில் ஒரு கோடியே 12 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பஞ்சாப்பில் இருந்து பீகார் நோக்கிச் சென்ற லாரியை அலிநகர் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது சிமெண்ட் மூட்டைகளுக்கு நடுவே 6 ஆயிரத்து 399 லிட்டர் வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் கடத்தி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.