திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கிணற்றுக்குள் விழுந்த மான்குட்டி பத்திரமாக மீட்கப்பட்டது.
கெண்டுவார்பட்டி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய மான்குட்டி, தண்ணீர் தேடி அலைந்து திரிந்தது.
அப்போது அருகிலிருந்த தோட்டத்துக் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிய நிலையில், தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி மானைப் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.