பொன்முடிக்கு எதிரான வழக்கில் நீதிபதி காட்டம்!
Jul 9, 2025, 12:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொன்முடிக்கு எதிரான வழக்கில் நீதிபதி காட்டம்!

Web Desk by Web Desk
Jul 8, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியல்வாதிகளின் பேச்சுக்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர்கள், பொன்முடிக்கு எதிரான இந்த  வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த முகாந்திரம் இல்லை எனவும் இந்த புகார்கள் முடித்து வைக்கப்பட்டுவிட்டதாகவும் வாதிட்டனர்.

இதனைக் கேட்ட நீதிபதி வேல்முருகன், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அரசியல்வாதிகளின் பேச்சுக்களை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனக் காட்டமாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி, ஒரு வழக்கில் ஆரம்பக்கட்ட விசாரணையே சம்பவம் நடந்ததா இல்லையா என்பதுதான் எனவும் ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர் விசாரணைக்கே முகாந்திரம் இல்லை எனத் தெரிவிப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

தங்களுக்கு வேண்டியவர்களுக்கு எதிரான வழக்கு என்றால் விசாரணைக்கு முகாந்திரம் இல்லை எனக் கூறும் அரசு தரப்பு, வேண்டாதவர்களுக்கான வழக்கு என்றால் விசாரணைக்கு உகந்தது என்று தெரிவிக்கிறீர்கள் அது ஏன்? என அரசு தரப்பை நோக்கி சரமாரி கேள்வி எழுப்பினார்.

இறுதியாக வாதங்களைக் கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், பொன்முடிக்கு எதிரான புகார்களை முடித்து வைத்ததாகப் பிறப்பித்த உத்தரவு குறித்து புகார்தாரர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும்   அதைச் செய்யத் தவறினால் வழக்கைத் தீவிரமாகக் கருத முடியும் எனவும் ஆணையிட்டார்.

தொடர்ந்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  வேல்முருகன்,  முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் மாதம் 1ம் தேதிக்குத் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Tags: tn politicalJudge Kattam in the case against Ponmudiநீதிபதி காட்டம்பொன்முடிக்கு எதிரான வழக்குponmudi news today
ShareTweetSendShare
Previous Post

செம்மங்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை : தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு!

Next Post

சமூக நீதி விடுதிகளின் அவலம் : பெயரை மாற்றினால் துயரம் தீருமா என கொந்தளிப்பு!

Related News

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா- தம்பி பலியான துயரம்!

ரூ.200 கோடி வரிகுறைப்பு மோசடி : மதுரையில் கூண்டோடு சிக்கிய திமுகவினர்!

“தமிழகத்தை மீட்போம்” – தாக்கத்தை ஏற்படுத்துமா EPS சுற்றுப்பயணம்?

காத்திருக்கும் சுற்றுலாப்பயணிகள் : கல்லாறு பழ பண்ணை மீண்டும் திறக்கப்படுமா?

சமூக நீதி விடுதிகளின் அவலம் : பெயரை மாற்றினால் துயரம் தீருமா என கொந்தளிப்பு!

செம்மங்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை : தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானை ஏமாற்றிய ரஃபேல் : இந்தியாவின் கண்ணாமூச்சி – பாராட்டி தள்ளும் மேற்குலகம்!

கட்டுப்பாட்டை இழக்கும் சீன அதிபர் : பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்காத பின்னணி!

அரிய தனிமங்களுக்கு கொடுத்த விலை : பூமியின் நரகமாக மாறிய சீன நகரம்!

பொன்முடிக்கு எதிரான வழக்கில் நீதிபதி காட்டம்!

விபத்தின்போது ரயில்வே கேட் திறந்து இருந்தது : உயிர் தப்பிய பள்ளி மாணவர் விஸ்வேஷ் பேட்டி!

முதலமைச்சர் பொறுப்புடன் செயல்படுவாரா? : அண்ணாமலை

அஜித்குமாரின் நண்பர் மீதும் தாக்குதல் : மருத்துவமனையில் அனுமதி!

கன்னியாகுமரி : ஜெபம் செய்வதாக கூறி இளம் பெண்ணிடம் அத்துமீறிய மதபோதகர் கைது!

சென்னை அண்ணா சாலையில் பகுதிநேர ஆசிரியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்!

ரிதன்யா தற்கொலைக்கு விரைவான நடவடிக்கை தேவை – நடிகை அம்பிகா வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies