உயர்ந்த மின் கட்டணம் : மூடப்படும் கயிறு ஆலைகள் - வேதனையில் தொழிலாளர்கள்!
Jan 14, 2026, 01:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உயர்ந்த மின் கட்டணம் : மூடப்படும் கயிறு ஆலைகள் – வேதனையில் தொழிலாளர்கள்!

Murugesan M by Murugesan M
Jul 9, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசின் மின்கட்டண உயர்வால் கயிறு உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டணத்தால் தொழில்முனைவோர்களும், தொழிலாளர்களும் சந்திக்கும் சிரமங்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழகத்தில் சேலம், பொள்ளாச்சி ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான கயிறு உற்பத்தி செய்யும் ஆலைகள் இயங்கி வருகின்றன.

இந்த ஆலைகளில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் ஆங்காங்கே வீடுகளிலும் கயிறு உற்பத்தி செய்யும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கயிற்றின் விலை ஆண்டுக்கு ஆண்டு சரிந்துவரும் நிலையில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் தமிழக அரசு உயர்த்திய மின்கட்டண உயர்வு கயிறு உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

கயிறு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் தென்னை மட்டையின் விலை கடந்தாண்டு 20 பைசாவிற்கு விற்கப்பட்ட நிலையில் நடப்பாண்டில் 2 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. தேங்காய் மற்றும் தென்னை மட்டையின் விலை அடுத்தடுத்து உயரும் நிலையில், அதன் மூலம் தயாரிக்கப்படும் கயிற்றின் விலையோ 40 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகச் சரிந்துள்ளது.

தொடர் நஷ்டத்தால் ஏராளாமான கயிறு உற்பத்தி நிறுவனங்கள் தனது உற்பத்தியை நிறுத்தியுள்ள நிலையில், மீதமுள்ள நிறுவனங்களையும் மொத்தமாக மூடும் அளவிற்கு மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டண உயர்வால் தமிழகத்தில் ஏராளமான சிறு,குறு தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டு அங்கு பணியாற்றி வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கேள்விக்குறியாகியுள்ளது. சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களைப் பாதுகாத்து பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டிய தமிழக அரசே, மின் கட்டணத்தை உயர்த்தி அத்தொழிலை அடியோடு முடக்கப்பார்ப்பதற்கு ஒட்டுமொத்த தொழில்துறையினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

Tags: மின் கட்டணம்High electricity bills: Rope factories to close - workers in painமூடப்படும் கயிறு ஆலைகள்வேதனையில் தொழிலாளர்கள்
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

பழிவாங்க நடந்த படுகொலை : இத்தாலியை உலுக்கிய மோப்ப நாயின் மரணம்!

Related News

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies