உயர்ந்த மின் கட்டணம் : மூடப்படும் கயிறு ஆலைகள் - வேதனையில் தொழிலாளர்கள்!
Jul 9, 2025, 07:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உயர்ந்த மின் கட்டணம் : மூடப்படும் கயிறு ஆலைகள் – வேதனையில் தொழிலாளர்கள்!

Web Desk by Web Desk
Jul 9, 2025, 03:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசின் மின்கட்டண உயர்வால் கயிறு உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டணத்தால் தொழில்முனைவோர்களும், தொழிலாளர்களும் சந்திக்கும் சிரமங்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழகத்தில் சேலம், பொள்ளாச்சி ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான கயிறு உற்பத்தி செய்யும் ஆலைகள் இயங்கி வருகின்றன.

இந்த ஆலைகளில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் ஆங்காங்கே வீடுகளிலும் கயிறு உற்பத்தி செய்யும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கயிற்றின் விலை ஆண்டுக்கு ஆண்டு சரிந்துவரும் நிலையில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் தமிழக அரசு உயர்த்திய மின்கட்டண உயர்வு கயிறு உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

கயிறு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் தென்னை மட்டையின் விலை கடந்தாண்டு 20 பைசாவிற்கு விற்கப்பட்ட நிலையில் நடப்பாண்டில் 2 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. தேங்காய் மற்றும் தென்னை மட்டையின் விலை அடுத்தடுத்து உயரும் நிலையில், அதன் மூலம் தயாரிக்கப்படும் கயிற்றின் விலையோ 40 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகச் சரிந்துள்ளது.

தொடர் நஷ்டத்தால் ஏராளாமான கயிறு உற்பத்தி நிறுவனங்கள் தனது உற்பத்தியை நிறுத்தியுள்ள நிலையில், மீதமுள்ள நிறுவனங்களையும் மொத்தமாக மூடும் அளவிற்கு மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டண உயர்வால் தமிழகத்தில் ஏராளமான சிறு,குறு தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டு அங்கு பணியாற்றி வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கேள்விக்குறியாகியுள்ளது. சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களைப் பாதுகாத்து பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டிய தமிழக அரசே, மின் கட்டணத்தை உயர்த்தி அத்தொழிலை அடியோடு முடக்கப்பார்ப்பதற்கு ஒட்டுமொத்த தொழில்துறையினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

Tags: மின் கட்டணம்High electricity bills: Rope factories to close - workers in painமூடப்படும் கயிறு ஆலைகள்வேதனையில் தொழிலாளர்கள்
ShareTweetSendShare
Previous Post

சீனாவை சிதைக்க திட்டம் ரெடி : ELECTRONICS உற்பத்தி அசுர பாய்ச்சலில் இந்தியா!

Next Post

மத்திய அரசின் அசத்தல் திட்டம் : மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்!

Related News

ஏர் இந்தியா விமான விபத்து : FUEL SWITCH காரணமா? – வெளியான புதிய தகவல்!

பழிவாங்க நடந்த படுகொலை : இத்தாலியை உலுக்கிய மோப்ப நாயின் மரணம்!

இறக்குமதி தாமிரம் 50%, மருந்து 200% – ட்ரம்ப் வரி எச்சரிக்கை இந்தியாவுக்கு பாதிப்பா?

சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அண்ணாமலை சுவாமி தரிசனம்!

தென்காசி அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டில் உள்ள கழிவறையில் தண்ணீர் இல்லை – தாய்மார்கள் சிரமம்!

Load More

அண்மைச் செய்திகள்

வேஷம் தரித்து ஆடும் நாடகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது நிறுத்தப் போகிறார்? – அண்ணாமலை கேள்வி!

வதோதராவில் பாலம் இடிந்து விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

மேற்குவங்கம் : கிரிக்கெட் போட்டி நடத்துவது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே மோதல்!

கர்நாடகாவில் அதிவேகமாக வந்த பைக் மோதி இருவர் உயிரிழப்பு!

நமீபியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

மண்டியில் வெள்ளப்பெருக்கில் இருந்து கிராமத்தையே காப்பாற்றிய நாய்!

விமான பயணிகள் ஷூக்களை அகற்ற அவசியமில்லை – அமெரிக்க அறிவிப்பு!

சத்தீஸ்கர் : சித்ரகூட் நீர்வீழ்ச்சியை காண குவியும் சுற்றுலா பயணிகள்!

தொமுச தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த வேலைநிறுத்த போராட்டம் தோல்வி : அண்ணா தொழிற்சங்க பேரவை மாநிலச் செயலாளர்!

கேரளாவில் பொது வேலை நிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies