உயர்ந்த மின் கட்டணம் : மூடப்படும் கயிறு ஆலைகள் - வேதனையில் தொழிலாளர்கள்!
Jul 29, 2026, 11:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உயர்ந்த மின் கட்டணம் : மூடப்படும் கயிறு ஆலைகள் – வேதனையில் தொழிலாளர்கள்!

Murugesan M by Murugesan M
Jul 9, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசின் மின்கட்டண உயர்வால் கயிறு உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டணத்தால் தொழில்முனைவோர்களும், தொழிலாளர்களும் சந்திக்கும் சிரமங்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழகத்தில் சேலம், பொள்ளாச்சி ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான கயிறு உற்பத்தி செய்யும் ஆலைகள் இயங்கி வருகின்றன.

இந்த ஆலைகளில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் ஆங்காங்கே வீடுகளிலும் கயிறு உற்பத்தி செய்யும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கயிற்றின் விலை ஆண்டுக்கு ஆண்டு சரிந்துவரும் நிலையில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் தமிழக அரசு உயர்த்திய மின்கட்டண உயர்வு கயிறு உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

கயிறு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் தென்னை மட்டையின் விலை கடந்தாண்டு 20 பைசாவிற்கு விற்கப்பட்ட நிலையில் நடப்பாண்டில் 2 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. தேங்காய் மற்றும் தென்னை மட்டையின் விலை அடுத்தடுத்து உயரும் நிலையில், அதன் மூலம் தயாரிக்கப்படும் கயிற்றின் விலையோ 40 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகச் சரிந்துள்ளது.

தொடர் நஷ்டத்தால் ஏராளாமான கயிறு உற்பத்தி நிறுவனங்கள் தனது உற்பத்தியை நிறுத்தியுள்ள நிலையில், மீதமுள்ள நிறுவனங்களையும் மொத்தமாக மூடும் அளவிற்கு மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டண உயர்வால் தமிழகத்தில் ஏராளமான சிறு,குறு தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டு அங்கு பணியாற்றி வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கேள்விக்குறியாகியுள்ளது. சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களைப் பாதுகாத்து பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டிய தமிழக அரசே, மின் கட்டணத்தை உயர்த்தி அத்தொழிலை அடியோடு முடக்கப்பார்ப்பதற்கு ஒட்டுமொத்த தொழில்துறையினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

Tags: மின் கட்டணம்High electricity bills: Rope factories to close - workers in painமூடப்படும் கயிறு ஆலைகள்வேதனையில் தொழிலாளர்கள்
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

பழிவாங்க நடந்த படுகொலை : இத்தாலியை உலுக்கிய மோப்ப நாயின் மரணம்!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies