விமான நிலையங்களில் சோதனையின் போது பயணிகள் இனி தங்களது ஷூக்களை அகற்ற வேண்டியதில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
2001 ஆம் ஆண்டில் பாரிஸிருந்து மியாமி நோக்கிச் சென்ற விமானத்தை வெடிக்கச் செய்ய ஷூ பாம் பயன்படுத்தப்பட்டது.
இதையடுத்து கடந்த 2006ம் ஆண்டு முதல் பயணிகள் சோதனைக்காக ஷூக்களை அகற்றுவது கட்டாயமாக்கப்பட்டது.
இந்நிலையில் அதி நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால் இனி பயணிகள் ஷூக்களை பரிசோதனைக்காக அகற்றத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.