திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கடத்த முயன்ற ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
தத்தமஞ்சி கிராமத்தில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள், ஒரு டன் ரேசன் அரிசியைப் பறிமுதல் செய்து தப்பியோடியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.