யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் உள்ள களமெழுத்துப் பாட்டு கன்னியாகுமாரி மாவட்டம் மீனச்சல் கிராமத்தில் நடைபெற்றது.
தரையில் தெய்வங்களின் உருவங்களை மூலிகை வண்ணப் பொடிகளால் வரைந்து, அதைப் பாடியும், நடனமாடியும் வழிபடுவது களமெழுத்துப் பாட்டு என அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் கன்னியாகுமாரி மாவட்டம் மீனச்சல் கிராமத்தில் அழிந்து வரும் களமெழுத்துப் பாட்டு என்ற பாரம்பரிய வழிபாட்டு முறையை பின் பற்றி பத்ரகாளியின் தத்ரூபத்தை வரைந்து கிராம மக்கள் வழிபட்டனர்.