ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை செயலாக்க அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இந்த சூழ்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சபிஹ் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் பிறந்த இவர் சிங்கப்பூரில் கல்வி கற்று, தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
30 ஆண்டுகளாக ஆப்பிளில் பணியாற்றும் சபி கானுக்கு தற்போது பதவி உயர்வு கிடைத்துள்ளது.