இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 786ஆக குறைந்துள்ளது.
அதிகபட்சமாகக் கேரளாவில் 174 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 2 பேர் பலியானதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 189 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.