விண்வெளியில் விவசாயம் : வெற்றிகரமாக நிறைவு செய்த சுபன்ஷூ சுக்லா!
Oct 10, 2025, 03:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

விண்வெளியில் விவசாயம் : வெற்றிகரமாக நிறைவு செய்த சுபன்ஷூ சுக்லா!

Web Desk by Web Desk
Jul 12, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குத் தான் எடுத்துச் சென்ற பாசிப்பயிரையும், வெந்தயச் செடியையும் முளைக்க வைத்து பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா. விண்வெளி நிலையத்தில் சுக்லா செய்த ஆய்வுகள் குறித்தும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அமெரிக்காவின் ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா உட்பட 4 வீரர்கள், கடந்த ஜூன் 26ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர். இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் இந்தியர், விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் போன்ற பெருமைகள் சுபன்ஷூ சுக்லா வசம் வந்தன.

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வரும் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா, விதை முளைப்பு மற்றும் செடி வளர்வதில் நுண் ஈர்ப்பு விசையால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

அதற்காகத் தான் எடுத்துவந்த வெந்தயம், பச்சைப் பயிறு விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனையை வெற்றிகரமாகவும் சுபன்ஷு சுக்லா நிறைவு செய்துள்ளார். முளை விட்ட விதைகளைப் புகைப்படம் எடுத்து வைத்திருக்கும் அவர், அதனைப் பூமிக்குப் பத்திரமாகக் கொண்டுவரக் குளிர்பதன பெட்டகத்தில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்தபடி ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத் தலைவரும், விஞ்ஞானியுமான லூசி லேவுடன் கலந்துரையாடிய சுக்லா, இந்தியாவில் உள்ள தேசிய நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு அறிவியல் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்களின் சார்பில் பல்வேறு சிறப்புமிக்க ஆய்வுகளை மேற்கொண்ட பணிகள் உற்சாகமும், மகிழ்ச்சியும் அளிப்பதாகக் கூறினார்.

ஸ்டெம் செல் ஆராய்ச்சி தொடங்கி விதை முளைப்பில் நுண் ஈர்ப்பு விசையின் தாக்கம் வரை பல்வேறு பரிமாணங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், ஆய்வாளர்கள் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இடையே பாலமாக இருப்பது பெருமையளிப்பதாகவும் சுபன்ஷூ சுக்லா தெரிவித்துள்ளார்.

சுபன்ஷூ சுக்லாவின் மூலமாக விண்வெளியில் வளர்க்கப்பட்ட பாசிப்பயிறு மற்றும் வெந்தய செடிகளின் வளர்ச்சி நாள்தோறும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுக்லா பூமிக்குத் திரும்பும் போது அந்த செடிகளையும் கொண்டு வருவார் எனவும், கர்நாடக மாநிலம் தார்வார்ட் கொண்டு செல்லப்பட்டு அந்த செடி வளர்க்கப்படும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதோடு, விண்வெளியில் நுண்பாசி மாதிரிகளையும் சுக்லா ஆய்வு செய்திருப்பதாகவும், வருங்காலத்தில் அவை விண்வெளியில் உணவு, எரிசக்தி மற்றும் தூய காற்றைக் கூட வழங்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

தனது அனைத்துவிதமான ஆய்வுகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் இந்திய விண்வெளி வீரர் சுக்லா, ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் மூலம் வரும் 14 ஆம் தேதி பூமியில் தரையிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஆதித்யா, சந்திரயான் என ஒட்டுமொத்த விண்வெளி உலகிற்கும் முன்னோடியாகத் திகழும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அடுத்தகட்ட திட்டங்களுக்கு சுபன்ஷு சுக்லாவின் இந்த விண்வெளிப் பயணம் உந்து சக்தியாக அமைந்திருக்கிறது.

Tags: விண்வெளியில் விவசாயம்Agriculture in space: Subhanshu Shukla successfully completes itசுபன்ஷூ சுக்லா!அமெரிக்காவின் ஆக்ஸியம் ஸ்பேஸ்ஆக்ஸியம்spaceஸ்பேஸ் எக்ஸ் டிராகன்சர்வதேச விண்வெளி நிலையம்
ShareTweetSendShare
Previous Post

வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் : இலங்கைக்கு சொகுசு சுற்றுலா செல்லும் அசீம் முனீர்!

Next Post

அகமதாபாத் விமான விபத்திற்கு காரணம் என்ன? – வெளியானது முதற்கட்ட விசாரணை அறிக்கை!

Related News

சபரிமலை தங்க கவச முறைகேடு – கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு : விதி மீறிய மருந்து நிறுவனம் – கோட்டை விட்ட தமிழக அரசு!

ஜப்பான் : பூத்து குலுங்கும் சிவப்பு நிற அல்லி மலர்கள்!

நேரடி விமான சேவை இந்திய உறவை மேம்படுத்த உதவும் : சீனா

காசா அமைதி ஒப்பந்தம் – நெதன்யாகுவை பாராட்டிய பிரதமர் மோடி!

காஸாவில் 55,000 சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

கிருஷ்ணகிரி : ஆம்புலன்ஸ் தாமதத்தால் மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்!

போட்டித் தேர்வை தள்ளி வைக்க கோரிய மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம்

மேம்பாலத்திற்கு அகற்றப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் – பொதுமக்கள் சிரமம்!

பழனியில் ராம்ராஜ் காட்டனின் 2வது கிளை திறப்பு!

தேனி : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் உயிரிழப்பு!

ஈரோடு : பழங்களை கொண்டு சென்ற மினி சரக்கு வாகனம் கவிழ்ந்தது!

ராணிப்பேட்டை : வெள்ளநீரில் மூழ்கிய தரைப்பாலம் – மாணவர்கள், கிராம மக்கள் அவதி!

திருப்பூர் : தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்!

இந்தோனேசியா : ஆட்டம், பாட்டத்துடன் களைகட்டிய கார்னிவல்!

பிரேக் பிடிக்காத அரசு பேருந்து – தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies