விண்வெளியில் விவசாயம் : வெற்றிகரமாக நிறைவு செய்த சுபன்ஷூ சுக்லா!
Sep 12, 2026, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

விண்வெளியில் விவசாயம் : வெற்றிகரமாக நிறைவு செய்த சுபன்ஷூ சுக்லா!

Murugesan M by Murugesan M
Jul 12, 2025, 06:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குத் தான் எடுத்துச் சென்ற பாசிப்பயிரையும், வெந்தயச் செடியையும் முளைக்க வைத்து பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா. விண்வெளி நிலையத்தில் சுக்லா செய்த ஆய்வுகள் குறித்தும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அமெரிக்காவின் ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா உட்பட 4 வீரர்கள், கடந்த ஜூன் 26ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர். இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் இந்தியர், விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் போன்ற பெருமைகள் சுபன்ஷூ சுக்லா வசம் வந்தன.

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வரும் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா, விதை முளைப்பு மற்றும் செடி வளர்வதில் நுண் ஈர்ப்பு விசையால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

அதற்காகத் தான் எடுத்துவந்த வெந்தயம், பச்சைப் பயிறு விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனையை வெற்றிகரமாகவும் சுபன்ஷு சுக்லா நிறைவு செய்துள்ளார். முளை விட்ட விதைகளைப் புகைப்படம் எடுத்து வைத்திருக்கும் அவர், அதனைப் பூமிக்குப் பத்திரமாகக் கொண்டுவரக் குளிர்பதன பெட்டகத்தில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்தபடி ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத் தலைவரும், விஞ்ஞானியுமான லூசி லேவுடன் கலந்துரையாடிய சுக்லா, இந்தியாவில் உள்ள தேசிய நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு அறிவியல் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்களின் சார்பில் பல்வேறு சிறப்புமிக்க ஆய்வுகளை மேற்கொண்ட பணிகள் உற்சாகமும், மகிழ்ச்சியும் அளிப்பதாகக் கூறினார்.

ஸ்டெம் செல் ஆராய்ச்சி தொடங்கி விதை முளைப்பில் நுண் ஈர்ப்பு விசையின் தாக்கம் வரை பல்வேறு பரிமாணங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், ஆய்வாளர்கள் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இடையே பாலமாக இருப்பது பெருமையளிப்பதாகவும் சுபன்ஷூ சுக்லா தெரிவித்துள்ளார்.

சுபன்ஷூ சுக்லாவின் மூலமாக விண்வெளியில் வளர்க்கப்பட்ட பாசிப்பயிறு மற்றும் வெந்தய செடிகளின் வளர்ச்சி நாள்தோறும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுக்லா பூமிக்குத் திரும்பும் போது அந்த செடிகளையும் கொண்டு வருவார் எனவும், கர்நாடக மாநிலம் தார்வார்ட் கொண்டு செல்லப்பட்டு அந்த செடி வளர்க்கப்படும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதோடு, விண்வெளியில் நுண்பாசி மாதிரிகளையும் சுக்லா ஆய்வு செய்திருப்பதாகவும், வருங்காலத்தில் அவை விண்வெளியில் உணவு, எரிசக்தி மற்றும் தூய காற்றைக் கூட வழங்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

தனது அனைத்துவிதமான ஆய்வுகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் இந்திய விண்வெளி வீரர் சுக்லா, ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் மூலம் வரும் 14 ஆம் தேதி பூமியில் தரையிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஆதித்யா, சந்திரயான் என ஒட்டுமொத்த விண்வெளி உலகிற்கும் முன்னோடியாகத் திகழும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அடுத்தகட்ட திட்டங்களுக்கு சுபன்ஷு சுக்லாவின் இந்த விண்வெளிப் பயணம் உந்து சக்தியாக அமைந்திருக்கிறது.

Tags: விண்வெளியில் விவசாயம்Agriculture in space: Subhanshu Shukla successfully completes itசுபன்ஷூ சுக்லா!அமெரிக்காவின் ஆக்ஸியம் ஸ்பேஸ்ஆக்ஸியம்spaceஸ்பேஸ் எக்ஸ் டிராகன்சர்வதேச விண்வெளி நிலையம்
Share
Tweet
SendShare
Previous Post

வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் : இலங்கைக்கு சொகுசு சுற்றுலா செல்லும் அசீம் முனீர்!

Next Post

அகமதாபாத் விமான விபத்திற்கு காரணம் என்ன? – வெளியானது முதற்கட்ட விசாரணை அறிக்கை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies