பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாகத் தமிழகம் வரவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 27, 28-ஆம் தேதிகளில் பிரதமர் மோடி வருகை தர உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகம் வரும் பிரதமர் மோடி, கங்கை கொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை நிகழ்வில் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு தமிழகச் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த வருகை அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக, வரும் 26-ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.