ஒடிசாவில் சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடியை கலப்பையில் பூட்டி வயலை உழ வைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
ராயகடா மாவட்டத்தின் கஞ்சமாஜிரா கிராமத்தில் இளம் பெண்ணும் ஒரு இளைஞனும் உள்ளூர் சமூக விதிமுறைகளை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இதற்கு தண்டனையாக அப்பகுதி மக்கள், காதல் ஜோடியை கலப்பையில் பூட்டி வயலை உழ வைத்தனர்.