பேரழிவின் இறுதி நொடிகள் : ஏர் இந்தியா விமான விபத்து - அதிர்ச்சி ரிப்போர்ட்!
Jan 13, 2026, 09:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பேரழிவின் இறுதி நொடிகள் : ஏர் இந்தியா விமான விபத்து – அதிர்ச்சி ரிப்போர்ட்!

Murugesan M by Murugesan M
Jul 12, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

260 பேரை பலி கொண்ட ஏர் இந்தியா விமான விபத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.விமானம் பேரழிவில் சிக்கியதற்கான காரணம் அங்குலம், அங்குலமாக ஆய்வு செய்யப்பட் நிலையில், முதற்கட்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறது விமான விபத்து புலனாய்வு அமைப்பு…. என்ன நடந்தது பார்க்கலாம் விரிவாக….

நாட்டையை உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் இந்திய விமானப் போக்குவரத்துத்துறை வரலாற்றில் ஒரு கருப்புப் பக்கமாகவே பதிவாகியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா AI 171 ரக விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில், மருத்துவக் கல்லூரி கட்டடத்தில் விழுந்து பயங்கரமாக வெடித்துச் சிதறியது.

விபத்துக்கான காரணம்குறித்து விசாரணையை விரைவுபடுத்துமாறு விமான விபத்து புலனாய்வு அமைப்புக்கு மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த 8ம் தேதி விமான விபத்து புலனாய்வு அமைப்பு வழங்கிய 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதில், ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 32 நொடிகளில், இரண்டு என்ஜின்களின் இயக்கம் தடைபட்டு, என்ஜின்களின் வேகம் சட்டென குறைந்ததாகவும், என்ஜின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் புறப்பட்ட சில நொடிகளில் ‘RUN’ நிலையிலிருந்து ‘CUTOFF’ நிலைக்கு மாறியதாகவும தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரில் விமானிகளின் பதிவாகியிருந்த உரையாடலில், ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் எரிபொருளை ஏன் துண்டித்தீர்கள் என்று கேட்க, மற்றொரு விமானி நான் துண்டிக்கவில்லை என்று பதிலளித்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விமானிகள், எரிபொருள் சுவிட்சுகளை மீண்டும் இயக்கியபோது, என்ஜின் 1 தானாகவே மீண்டும் இயங்கிய நிலையில், 2-வது என்ஜினை இயக்கும் முயற்சி தோல்வியில் முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானிகள் மேற்கொண்ட முயற்சியின்போது, விமானத்தில் மின்சாரம் தடைபட்டதால், அவசரகால மின்சக்தி ஆதாரமான ராம் ஏர் டர்பைன் தானாகவே செயல்பட தொடங்கியதாகவும், 180 நாட் வேகத்தைச் சிறிது நேரத்தில் எட்டிய விமானம் தாழ்வாகப் பறந்து கொண்டிருந்த நிலையில், உடனடியாக உயர எழும்ப முடியாததால், விபத்தில் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. (SPL GFX OUT) தற்போது கிடைத்துள்ள அறிக்கையின்படி, விபத்துக்குக் காரணம் எரிபொருள் சுவிச் ஆஃப் செய்யப்பட்டதுதானென தெரிய வந்திருக்கிறது.

இது எப்படி CUTOFF ஆனது? விமானிகள் செயலா? அல்லது தானாக CUTOFF ஆனதா? என்பது குறித்த பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அடுத்தடுத்த விசாரணைக்குப் பின் கிடைக்கும் அறிக்கைகள்மூலம் உண்மையான காரணம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று போயிங் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Tags: air india plane accidentFinal seconds of disaster: Air India plane crash - Shocking reportair india news
ShareTweetSendShare
Previous Post

நிலச்சரிவு அபாயம் : அதிகரிக்கும் சட்டவிரோத கட்டிடங்களால் ஆபத்து!

Next Post

உக்ரைனுக்கு எதிரான போர் : அமெரிக்கா இரட்டை வேடம் – ரஷ்யாவிற்கு உதவியது அம்பலம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies