மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கனமழையின் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் இரண்டு முறை முழு கொள்ளளவை எட்டியது.
இதனையடுத்து கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இன்று நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்தது. இதனால் 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்ட உபரிநீர் 15 நாட்களுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது.