செஞ்சிக்கோட்டைக்கு அங்கீகாரம் : உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது யுனேஸ்கோ!
Oct 29, 2025, 05:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செஞ்சிக்கோட்டைக்கு அங்கீகாரம் : உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது யுனேஸ்கோ!

Web Desk by Web Desk
Jul 14, 2025, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக் கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது யுனெஸ்கோ… இந்தியா முழுவதும் மராட்டியர்கள் கட்டிய 12 கோட்டைகளில் ஒன்றாக செஞ்சிக்கோட்டைக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இயற்கை அரணாக அமைந்த மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள்,  நீண்ட மதில் சுவர்கள் என இன்றும் கம்பீரமாய் காட்சியளிக்கிறது நம் செஞ்சிக்கோட்டை.

தமிழர் கட்டிடக்கலை, போர்திறன், அரசியல், கலாச்சார ஒற்றுமையின் முக்கிய சான்றாகத் திகழும் செஞ்சிக்கோட்டை, கிழக்கின் ட்ராய் என்றும்,  உட்புக முடியாத கோட்டை  இந்தியாவிலேயே பழமையான, வலுவான கோட்டைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. கடந்த 1921ஆம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட  செஞ்சிக்கோட்டை தற்போதும் வீரம் மங்காமல் காட்சியளித்து வருகிறது.

13ஆம் நூற்றாண்டில் இடையர் குலத்தைச் சேர்ந்த ஆனந்த கோன் என்பவரால் முதன்முதலில் கட்டப்பட்ட செஞ்சிக்கோட்டை, மஹால், தானியக் களஞ்சியம், சிறைச்சாலை, படையினர் பயிற்சிக்கூடம், கோயில்கள், பள்ளிவாசல், அகழிகள், கணவாய் போன்றவற்றுடன் நிமிர்ந்து நிற்கிறது.

விஜயநகரப்பேரரசு, செஞ்சி நாயக்கர்கள், பிஜப்பூர் சுல்தான், பேரரசர் சிவாஜி, மொகலாயர்கள், ஆற்காடு நவாப் என அடுத்தடுத்து கைமாறிய செஞ்சிக்கோட்டை, இறுதியில் 1799ம் ஆண்டு ஆங்கிலேயர் வசம் வந்தது.

தற்போது தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சி கோட்டையை மத்திய அரசின் பரிந்துரைப்படி, உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது யுனெஸ்கோ. பாரீஸில் நடந்த உலக பாரம்பரியக் குழுவின் 47-ஆவது அமர்வில், மராட்டியர்கள் கட்டிய இந்தியாவின் 12 கோட்டைகளில் ஒன்றாக செஞ்சிக்கோட்டையும் உலக பாரம்பரிய சின்னமான அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், கும்பகோணம் ஐராவதேஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம், மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள், நீலகிரி மலை ரயில் பாதை வரிசையில் ஆறாவதாக செஞ்சிக்கோட்டையும் இணைந்துள்ளது.

Tags: செஞ்சிக்கோட்டை news todayயுனேஸ்கோ newstamil nadu newsRecognition of the Red Fort: UNESCO declares it a World Heritage Siteசெஞ்சிக்கோட்டைக்கு அங்கீகாரம்யுனேஸ்கோ
ShareTweetSendShare
Previous Post

பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் : தகாத இடத்தில் தொட்டு கைது செய்ததாக பெண் ஆசிரியர்கள் புகார்!

Next Post

திகில் காட்டில் திக்! திக்! : குகையில் 2 குழந்தைகளுடன் இருந்த ரஷ்ய பெண் மீட்பு!

Related News

பகலில் டேப்டாப் : இரவில் ஸ்டியரிங் வீல் – தனிமையை போக்க புதிய வழி தேடும் மென்பொறியாளர்கள்!

திருமண மோசடி புகார் – மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா மகளிர் ஆணையத்தில் ஆஜர்!

இந்திய நீதித்துறையின் மந்தநிலை பொருளாதார வளர்ச்சிக்கு தடையா? : அமெரிக்க ஆராய்ச்சியாளரின் ஆய்வறிக்கை சொல்வது என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஞான பாரதம் திட்டத்தின் கீழ் பழமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடக்கம்!

100 மில்லியன் டாலரை நெருங்கும் ஆண்டு வருமானம் : உலகின் அதிக ஊதியம் பெறும் CEO-வாக மாறிய சத்ய நாதெல்லா – சிறப்பு தொகுப்பு!

பழனி தண்டாயுதபாணி கோயில் கந்த சஷ்டி திருவிழா – திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாடு – குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்!

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சரவண பவன் உணவகத்திற்கு சீல் – வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை!

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா பக்தர்கள் – நெய் விளக்கேற்றி வழிபாடு!

திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி – தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

சென்னையில் 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்!

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய் – நேரில் சந்தித்தவர் பேட்டி!

கனமழை – பள்ளிக்கரணையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஆவடி அருகே ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் மிளிரும் தமிழகம் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies