செஞ்சிக்கோட்டைக்கு அங்கீகாரம் : உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது யுனேஸ்கோ!
Jun 24, 2026, 12:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செஞ்சிக்கோட்டைக்கு அங்கீகாரம் : உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது யுனேஸ்கோ!

Murugesan M by Murugesan M
Jul 14, 2025, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக் கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது யுனெஸ்கோ… இந்தியா முழுவதும் மராட்டியர்கள் கட்டிய 12 கோட்டைகளில் ஒன்றாக செஞ்சிக்கோட்டைக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இயற்கை அரணாக அமைந்த மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள்,  நீண்ட மதில் சுவர்கள் என இன்றும் கம்பீரமாய் காட்சியளிக்கிறது நம் செஞ்சிக்கோட்டை.

தமிழர் கட்டிடக்கலை, போர்திறன், அரசியல், கலாச்சார ஒற்றுமையின் முக்கிய சான்றாகத் திகழும் செஞ்சிக்கோட்டை, கிழக்கின் ட்ராய் என்றும்,  உட்புக முடியாத கோட்டை  இந்தியாவிலேயே பழமையான, வலுவான கோட்டைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. கடந்த 1921ஆம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட  செஞ்சிக்கோட்டை தற்போதும் வீரம் மங்காமல் காட்சியளித்து வருகிறது.

13ஆம் நூற்றாண்டில் இடையர் குலத்தைச் சேர்ந்த ஆனந்த கோன் என்பவரால் முதன்முதலில் கட்டப்பட்ட செஞ்சிக்கோட்டை, மஹால், தானியக் களஞ்சியம், சிறைச்சாலை, படையினர் பயிற்சிக்கூடம், கோயில்கள், பள்ளிவாசல், அகழிகள், கணவாய் போன்றவற்றுடன் நிமிர்ந்து நிற்கிறது.

விஜயநகரப்பேரரசு, செஞ்சி நாயக்கர்கள், பிஜப்பூர் சுல்தான், பேரரசர் சிவாஜி, மொகலாயர்கள், ஆற்காடு நவாப் என அடுத்தடுத்து கைமாறிய செஞ்சிக்கோட்டை, இறுதியில் 1799ம் ஆண்டு ஆங்கிலேயர் வசம் வந்தது.

தற்போது தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சி கோட்டையை மத்திய அரசின் பரிந்துரைப்படி, உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது யுனெஸ்கோ. பாரீஸில் நடந்த உலக பாரம்பரியக் குழுவின் 47-ஆவது அமர்வில், மராட்டியர்கள் கட்டிய இந்தியாவின் 12 கோட்டைகளில் ஒன்றாக செஞ்சிக்கோட்டையும் உலக பாரம்பரிய சின்னமான அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், கும்பகோணம் ஐராவதேஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம், மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள், நீலகிரி மலை ரயில் பாதை வரிசையில் ஆறாவதாக செஞ்சிக்கோட்டையும் இணைந்துள்ளது.

Tags: செஞ்சிக்கோட்டை news todayயுனேஸ்கோ newstamil nadu newsRecognition of the Red Fort: UNESCO declares it a World Heritage Siteசெஞ்சிக்கோட்டைக்கு அங்கீகாரம்யுனேஸ்கோ
ShareTweetSendShare
Previous Post

பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் : தகாத இடத்தில் தொட்டு கைது செய்ததாக பெண் ஆசிரியர்கள் புகார்!

Next Post

திகில் காட்டில் திக்! திக்! : குகையில் 2 குழந்தைகளுடன் இருந்த ரஷ்ய பெண் மீட்பு!

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies