செஞ்சிக்கோட்டைக்கு அங்கீகாரம் : உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது யுனேஸ்கோ!
Aug 12, 2026, 06:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செஞ்சிக்கோட்டைக்கு அங்கீகாரம் : உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது யுனேஸ்கோ!

Murugesan M by Murugesan M
Jul 14, 2025, 07:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக் கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது யுனெஸ்கோ… இந்தியா முழுவதும் மராட்டியர்கள் கட்டிய 12 கோட்டைகளில் ஒன்றாக செஞ்சிக்கோட்டைக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இயற்கை அரணாக அமைந்த மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள்,  நீண்ட மதில் சுவர்கள் என இன்றும் கம்பீரமாய் காட்சியளிக்கிறது நம் செஞ்சிக்கோட்டை.

தமிழர் கட்டிடக்கலை, போர்திறன், அரசியல், கலாச்சார ஒற்றுமையின் முக்கிய சான்றாகத் திகழும் செஞ்சிக்கோட்டை, கிழக்கின் ட்ராய் என்றும்,  உட்புக முடியாத கோட்டை  இந்தியாவிலேயே பழமையான, வலுவான கோட்டைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. கடந்த 1921ஆம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட  செஞ்சிக்கோட்டை தற்போதும் வீரம் மங்காமல் காட்சியளித்து வருகிறது.

13ஆம் நூற்றாண்டில் இடையர் குலத்தைச் சேர்ந்த ஆனந்த கோன் என்பவரால் முதன்முதலில் கட்டப்பட்ட செஞ்சிக்கோட்டை, மஹால், தானியக் களஞ்சியம், சிறைச்சாலை, படையினர் பயிற்சிக்கூடம், கோயில்கள், பள்ளிவாசல், அகழிகள், கணவாய் போன்றவற்றுடன் நிமிர்ந்து நிற்கிறது.

விஜயநகரப்பேரரசு, செஞ்சி நாயக்கர்கள், பிஜப்பூர் சுல்தான், பேரரசர் சிவாஜி, மொகலாயர்கள், ஆற்காடு நவாப் என அடுத்தடுத்து கைமாறிய செஞ்சிக்கோட்டை, இறுதியில் 1799ம் ஆண்டு ஆங்கிலேயர் வசம் வந்தது.

தற்போது தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சி கோட்டையை மத்திய அரசின் பரிந்துரைப்படி, உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது யுனெஸ்கோ. பாரீஸில் நடந்த உலக பாரம்பரியக் குழுவின் 47-ஆவது அமர்வில், மராட்டியர்கள் கட்டிய இந்தியாவின் 12 கோட்டைகளில் ஒன்றாக செஞ்சிக்கோட்டையும் உலக பாரம்பரிய சின்னமான அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், கும்பகோணம் ஐராவதேஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம், மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள், நீலகிரி மலை ரயில் பாதை வரிசையில் ஆறாவதாக செஞ்சிக்கோட்டையும் இணைந்துள்ளது.

Tags: tamil nadu newsRecognition of the Red Fort: UNESCO declares it a World Heritage Siteசெஞ்சிக்கோட்டைக்கு அங்கீகாரம்யுனேஸ்கோசெஞ்சிக்கோட்டை news todayயுனேஸ்கோ news
Share
Tweet
SendShare
Previous Post

பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் : தகாத இடத்தில் தொட்டு கைது செய்ததாக பெண் ஆசிரியர்கள் புகார்!

Next Post

திகில் காட்டில் திக்! திக்! : குகையில் 2 குழந்தைகளுடன் இருந்த ரஷ்ய பெண் மீட்பு!

Related News

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!

அமலாக்கத்துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்தது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒவ்வொருவரின் உணர்வில் கலந்துள்ளது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies