ஐரோப்பாவை பொசுக்கும் "SILENT KILLER" - 10 நாட்களில் 2300 பேர் மரணம்!
Jan 14, 2026, 08:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஐரோப்பாவை பொசுக்கும் “SILENT KILLER” – 10 நாட்களில் 2300 பேர் மரணம்!

Murugesan M by Murugesan M
Jul 14, 2025, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐரோப்பிய நாடுகளைச் சுட்டெரிக்கும் வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தகிக்கும் வெயிலைச் சமாளிக்க முடியாமல் மக்கள் பரிதவித்து வருவது ஐரோப்பிய நாடுகளைக் கவலை கொள்ளச் செய்துள்ளது.

வரலாறு காணாத வெப்பம்… அனலைக் கக்கும் வெயில் என ஐரோப்பிய நாடுகளைக் கலங்க வைத்துள்ளது கோடைக்காலம்.

பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் தொடங்கி பின்லாந்து, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாகப் பதிவாகியிருக்கிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 105 டிகிரி பாரன்ஹீட் சுட்டெரித்த நிலையில், மார்ஷல் நகரில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. கடுமையான வெப்பம், வறட்சி போன்றவை காட்டுத் தீவிக்குத் தீனி போட்டதால் அது வனத்தையே கபளீகரம் செய்தது.

போர்ச்சுகலில் உள்ள மோரா நகரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 138 டிகிரி பாரன்ஹீட் பதிவான வெப்பம் மக்கள் பரிதவிக்க வைத்துள்ளது. இதுதான்  ஐரோப்பாவில் இதுவரை பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலையாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெப்பம், அனல் காற்று போன்றவற்றால் ஐரோப்பிய மகள் பகல் நேரங்களில்  வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் அவசரக் கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் காலை 11 மணி முதல் 6 மணி வரை வெளியில் வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் மெட்டியோ, ஜெர்மனி நாட்டின் முனிச் போன்ற நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்கள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வெப்பத்தின் தாக்கத்தினாலும், பல்வேறு உடல் உபாதைகளாலும் ஐரோப்பிய நாடுகளில் கடந்த 10 நாட்களில் மட்டும் இரண்டாயிரத்து 300 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

புவி வெப்பமயமாதல், தொழில்மயமாக்கல், புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்றவை பருவநிலை மாற்றத்திற்கு வித்திடுவதால், அது வெப்ப அலைகள் தீவிரமடைவதற்கு வழிவகுத்து விடுவதாகக் கூறும் ஆய்வாளர்கள், உலக நாடுகள் இயற்கையைக் காப்பதற்கான முன்னெடுப்புகளைக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

Tags: புவி வெப்பமயமாதல்தொழில்மயமாக்கல்ஐரோப்பாவை பொசுக்கும் வெப்பம்போர்ச்சுகல்ஸ்பெயின்பிரான்ஸ்"SILENT KILLER" sweeping Europe - 2300 people die in 10 daysSILENT KILLER
ShareTweetSendShare
Previous Post

குமரகிரி குமரனுக்கு எப்போது கும்பாபிஷேகம்? – முடங்கிக் கிடக்கும் திருப்பணிகள்!

Next Post

நடிகை சரோஜா தேவி காலமானார்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies