ஐரோப்பாவை பொசுக்கும் "SILENT KILLER" - 10 நாட்களில் 2300 பேர் மரணம்!
May 12, 2026, 06:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஐரோப்பாவை பொசுக்கும் “SILENT KILLER” – 10 நாட்களில் 2300 பேர் மரணம்!

Murugesan M by Murugesan M
Jul 14, 2025, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐரோப்பிய நாடுகளைச் சுட்டெரிக்கும் வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தகிக்கும் வெயிலைச் சமாளிக்க முடியாமல் மக்கள் பரிதவித்து வருவது ஐரோப்பிய நாடுகளைக் கவலை கொள்ளச் செய்துள்ளது.

வரலாறு காணாத வெப்பம்… அனலைக் கக்கும் வெயில் என ஐரோப்பிய நாடுகளைக் கலங்க வைத்துள்ளது கோடைக்காலம்.

பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் தொடங்கி பின்லாந்து, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாகப் பதிவாகியிருக்கிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 105 டிகிரி பாரன்ஹீட் சுட்டெரித்த நிலையில், மார்ஷல் நகரில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. கடுமையான வெப்பம், வறட்சி போன்றவை காட்டுத் தீவிக்குத் தீனி போட்டதால் அது வனத்தையே கபளீகரம் செய்தது.

போர்ச்சுகலில் உள்ள மோரா நகரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 138 டிகிரி பாரன்ஹீட் பதிவான வெப்பம் மக்கள் பரிதவிக்க வைத்துள்ளது. இதுதான்  ஐரோப்பாவில் இதுவரை பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலையாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெப்பம், அனல் காற்று போன்றவற்றால் ஐரோப்பிய மகள் பகல் நேரங்களில்  வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் அவசரக் கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் காலை 11 மணி முதல் 6 மணி வரை வெளியில் வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் மெட்டியோ, ஜெர்மனி நாட்டின் முனிச் போன்ற நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்கள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வெப்பத்தின் தாக்கத்தினாலும், பல்வேறு உடல் உபாதைகளாலும் ஐரோப்பிய நாடுகளில் கடந்த 10 நாட்களில் மட்டும் இரண்டாயிரத்து 300 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

புவி வெப்பமயமாதல், தொழில்மயமாக்கல், புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்றவை பருவநிலை மாற்றத்திற்கு வித்திடுவதால், அது வெப்ப அலைகள் தீவிரமடைவதற்கு வழிவகுத்து விடுவதாகக் கூறும் ஆய்வாளர்கள், உலக நாடுகள் இயற்கையைக் காப்பதற்கான முன்னெடுப்புகளைக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

Tags: புவி வெப்பமயமாதல்தொழில்மயமாக்கல்ஐரோப்பாவை பொசுக்கும் வெப்பம்போர்ச்சுகல்ஸ்பெயின்பிரான்ஸ்"SILENT KILLER" sweeping Europe - 2300 people die in 10 daysSILENT KILLER
ShareTweetSendShare
Previous Post

குமரகிரி குமரனுக்கு எப்போது கும்பாபிஷேகம்? – முடங்கிக் கிடக்கும் திருப்பணிகள்!

Next Post

நடிகை சரோஜா தேவி காலமானார்!

Related News

சேமிக்க முடியாத கச்சா எண்ணெய்யை கடலில் வெளியேற்றி வரும் ஈரான் – செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதி!

ஆப்ரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு – விமானப்படை வெளியிட்ட வீடியோ!

இந்தியாவின் தாக்குதலில் சேதம் அடைந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மீண்டும் கட்டமைப்பு!

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தல் – தமிழ் பெண் நித்யா ராமனுக்கு வெற்றி வாய்ப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

Load More

அண்மைச் செய்திகள்

மு.க ஸ்டாலின், வைகோ, சீமானுடன் நேரில் சந்திப்பு; வாழ்த்து பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்

மின்மாற்றி கொள்முதல் முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தமிழக முதல்வர் விஜய்க்கு Z+ பாதுகாப்பு – மத்திய அரசு அனுமதி!

மின்மாற்றி ஊழல் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை திரும்பப்பெற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

டெல்லி வெள்ள மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார் விஜய் – உதயநிதி, இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரும் பதவியேற்பு!

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரிக்கு திரிணாமூல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பாராட்டு!

உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் குஜராத் – பிரதமர் மோடி பெருமிதம்!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் – அரசாணை வெளியீடு!

தெலங்கானாவில் சுமார் ரூ.50000 கோடி முதலீட்டில் பல்வேறு திட்டங்கள் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies