காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவை, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டினார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் மொத்தம் 190 கிலோ எடையைத் தூக்கி பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ள மீராபாய் சானுவை நேரில் சந்தித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டு தெரிவித்தார். டெல்லியில் நடந்த சந்திப்பின்போது மீராபாய் சானுவுக்கு மலர் கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர் மன்சுவிக் மாண்டியா, மத்திய அரசு சார்பில் 30 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கி கௌரவித்தார். மேலும், மீராபாய் சானுவின் சிறப்பான செயல்பாட்டை பாராட்டிய மத்திய அமைச்சர், அவரது வெற்றி இளம் விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
















