இங்கிலாந்துக்கு எதிரான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர் முகமது சிராஜுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் விக்கெட் எடுத்த உற்சாகத்தில் இந்திய வீரர் முகமது சிராஜ், பென் டக்கெட் முகத்துக்கு நேராகச் சென்று ஆக்ரோஷமாக கத்தியதுடன், அவரது தோள்பட்டை மீதும் மோதினார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சிராஜுக்கு போட்டிக் கட்டணத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.