சர்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோர் பூமிக்கு திரும்புகின்றனர்.
கடந்த ஜூன் 25-ஆம் தேதி சுபான்ஷு சுக்லா, பெக்கி விட்சன், திபோர் கபு உள்ளிட்ட 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர்.
14 நாட்களாக அவர்கள் அனைவரும் விண்வெளியில் பயிர் வளர்ப்பு உள்ளிட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர்.
அவர்களது பயணம் நிறைவடைந்த நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் 4 வீரர்களும் பூமிக்குத் திரும்புகின்றனர். அவர்கள் நாளை மதியம் 3 மணியளவில் பூமியை வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.