கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் பொருட்காட்சி திடலில் ஆபாச நடனமாடிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குழித்துறையில் வாவுபலி பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சி திடலில் மார்ஷல், ஷாஜி உட்பட ஏழு பேர் நைட்டியோடு ஆபாச நடனம் ஆடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில் ஏழு பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.