எச்சரிக்கும் மருத்துவர்கள் : சதை உண்ணும் பாக்டீரியா!
Jan 14, 2026, 04:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

எச்சரிக்கும் மருத்துவர்கள் : சதை உண்ணும் பாக்டீரியா!

Murugesan M by Murugesan M
Jul 18, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் புளோரிடாவின் சதை உண்ணும் பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேர் மரணமடைந்த செய்தி பலரையும் உலுக்கியுள்ளது. இவ்வகை பாக்டீரியாக்கள் முகத்துவார பகுதிகளில் காணப்படும் நிலையில், கடலில் நீராடுபவர்கள், மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கிறது மருத்துவ உலகம்.

அமெரிக்காவில்  ஒரே மருத்துவ காரணத்திற்காக  4 பேர் அடுத்தடுத்து மரணமடைந்த நிலையில், அவர்கள் நால்வரும் புளோரிடா கடலில் நீராடியதும், சதை உண்ணும் பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்டிருப்பதும் மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

(Vibrio vulnificus) விப்ரியோ வல்னிஃபிகஸ் என்ற பெயர் கொண்ட இந்த பாக்டீரியா, கடலுடன் நன்னீர் கலக்கும் கழிமுக பகுதிகளில் செழித்து வளரக்கூடியது. காலராவை ஏற்படுத்தும் பாக்டீரியா வகையைச் சேர்ந்தது என்றாலும், Vibrio vulnificus பாக்டீரியாக்கள் ஆபத்தானவை என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

புளோரிடா கடலோர பகுதி 20 டிகிரி செல்சியஸ்-க்கும் அதிகமான வெப்ப நிலையைக் கொண்டிருப்பதால், இவ்வகை பாக்டீரியாக்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது. காயங்கள், சிராய்ப்பு மூலமாகவும், பச்சையான கடல் உணவுகள் குறிப்பாகப் பச்சை சிப்பிகளை உண்பதன் மூலமாகவும் மனிதனுக்குப் பாக்டீரியா தொற்று ஏற்படுகிறது.

மனித உடலுக்குள் புகுந்ததும், காயத்தைச் சுற்றி அதிகப்படியான வலி, கொப்புளங்கள் ஏற்படும், வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம் போன்றவற்றையும் ஏற்படுத்தும்.

இரத்த ஓட்டத்தில் எதிர்வினையாற்றும் இவ்வகை பாக்டீரியாக்கள், திசு மரணத்தை ஏற்படுத்தக் கூடியது. சில நேரங்களில் உடல் உறுப்புகளைத் துண்டித்து நோயாளியைக் காப்பாற்றினாலும், பெரிய அளவில் பலனளிக்காது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கல்லீரல் நோய் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாதவர்கள், முதியவர்கள் இவ்வகை பாக்டீரியாக்களால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான சதை உண்ணும் பாக்டீரியாக்களிடம் இருந்து தப்பிக்க, வெதுவெதுப்பான கடல் நீரில் நீராடுவதைத் தவிர்க்க வேண்டும், கடல் உணவைச் சாப்பிட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Tags: அமெரிக்காவின் புளோரிடாDoctors warn: Flesh-eating bacteriaஎச்சரிக்கும் மருத்துவர்கள்சதை உண்ணும் பாக்டீரியா
ShareTweetSendShare
Previous Post

அண்ணாமலையார் திருக்கோவிலில் சிறப்பு தரிசனக் கட்டண உயர்வுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Next Post

டான் ரிவேரா மரணத்தில் மர்மம்? : அனபெல் பொம்மையை சுற்றி சுழலும் கேள்விகள்!

Related News

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More

அண்மைச் செய்திகள்

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies