எச்சரிக்கும் மருத்துவர்கள் : சதை உண்ணும் பாக்டீரியா!
Jul 18, 2025, 10:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

எச்சரிக்கும் மருத்துவர்கள் : சதை உண்ணும் பாக்டீரியா!

Web Desk by Web Desk
Jul 18, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் புளோரிடாவின் சதை உண்ணும் பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேர் மரணமடைந்த செய்தி பலரையும் உலுக்கியுள்ளது. இவ்வகை பாக்டீரியாக்கள் முகத்துவார பகுதிகளில் காணப்படும் நிலையில், கடலில் நீராடுபவர்கள், மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கிறது மருத்துவ உலகம்.

அமெரிக்காவில்  ஒரே மருத்துவ காரணத்திற்காக  4 பேர் அடுத்தடுத்து மரணமடைந்த நிலையில், அவர்கள் நால்வரும் புளோரிடா கடலில் நீராடியதும், சதை உண்ணும் பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்டிருப்பதும் மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

(Vibrio vulnificus) விப்ரியோ வல்னிஃபிகஸ் என்ற பெயர் கொண்ட இந்த பாக்டீரியா, கடலுடன் நன்னீர் கலக்கும் கழிமுக பகுதிகளில் செழித்து வளரக்கூடியது. காலராவை ஏற்படுத்தும் பாக்டீரியா வகையைச் சேர்ந்தது என்றாலும், Vibrio vulnificus பாக்டீரியாக்கள் ஆபத்தானவை என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

புளோரிடா கடலோர பகுதி 20 டிகிரி செல்சியஸ்-க்கும் அதிகமான வெப்ப நிலையைக் கொண்டிருப்பதால், இவ்வகை பாக்டீரியாக்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது. காயங்கள், சிராய்ப்பு மூலமாகவும், பச்சையான கடல் உணவுகள் குறிப்பாகப் பச்சை சிப்பிகளை உண்பதன் மூலமாகவும் மனிதனுக்குப் பாக்டீரியா தொற்று ஏற்படுகிறது.

மனித உடலுக்குள் புகுந்ததும், காயத்தைச் சுற்றி அதிகப்படியான வலி, கொப்புளங்கள் ஏற்படும், வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம் போன்றவற்றையும் ஏற்படுத்தும்.

இரத்த ஓட்டத்தில் எதிர்வினையாற்றும் இவ்வகை பாக்டீரியாக்கள், திசு மரணத்தை ஏற்படுத்தக் கூடியது. சில நேரங்களில் உடல் உறுப்புகளைத் துண்டித்து நோயாளியைக் காப்பாற்றினாலும், பெரிய அளவில் பலனளிக்காது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கல்லீரல் நோய் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாதவர்கள், முதியவர்கள் இவ்வகை பாக்டீரியாக்களால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான சதை உண்ணும் பாக்டீரியாக்களிடம் இருந்து தப்பிக்க, வெதுவெதுப்பான கடல் நீரில் நீராடுவதைத் தவிர்க்க வேண்டும், கடல் உணவைச் சாப்பிட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Tags: எச்சரிக்கும் மருத்துவர்கள்சதை உண்ணும் பாக்டீரியாஅமெரிக்காவின் புளோரிடாDoctors warn: Flesh-eating bacteria
ShareTweetSendShare
Previous Post

திணறும் காவல்துறை : சிதைக்கப்பட்ட சிறுமி கிடைக்குமா நீதி?

Next Post

டான் ரிவேரா மரணத்தில் மர்மம்? : அனபெல் பொம்மையை சுற்றி சுழலும் கேள்விகள்!

Related News

15,000 அடி உயரத்தில் சோதனை – இலக்கை தூளாக்கிய அஸ்திரங்கள்! : பாகிஸ்தான், சீனாவை மிரளவிட்ட இந்தியா!

சீனா, ரஷ்யா தயவு வேண்டாம் : டைட்டானியம் உற்பத்தியில் சாதனை படைக்கும் இந்தியா!

ஆளுங்கட்சியினரின் அராஜகம் : அஞ்சி நடுங்கும் அதிகாரிகள்!

இந்தியாவை முஸ்லீம் நாடாக்க முயற்சி : சிக்கிய மத மாற்ற கும்பல் – குவிந்த பல நுாறு கோடி!

“Spam content” சர்ச்சையால் அதிரடி : 1 கோடி கணக்குகளுக்கு பூட்டுப்போட்ட மெட்டா!

கோடி கோடியாய் அள்ளிய பிசிசிஐ : ஒரே ஆண்டில் இவ்வளவு வருமானமா?

Load More

அண்மைச் செய்திகள்

‘கிஸ் கேம்’ சர்ச்சையில் ஆஸ்ட்ரோனமர் CEO : வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் – கலாய்த்த எலான் மஸ்க்!

கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் : மூடப்படும் ரயில்வே கேட்டால் தவியாய் தவிக்கும் மக்கள்!

டான் ரிவேரா மரணத்தில் மர்மம்? : அனபெல் பொம்மையை சுற்றி சுழலும் கேள்விகள்!

எச்சரிக்கும் மருத்துவர்கள் : சதை உண்ணும் பாக்டீரியா!

திணறும் காவல்துறை : சிதைக்கப்பட்ட சிறுமி கிடைக்குமா நீதி?

அண்ணாமலையார் திருக்கோவிலில் சிறப்பு தரிசனக் கட்டண உயர்வுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்!

ஜம்மு-காஷ்மீர் : சாலை விபத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் 5 பேர் காயம்!

2023-24 இல் பிசிசிஐ-இன் வருவாய் ரூ.9,741 கோடி!

மாற்றத்தையும், வளர்ச்சியையும் வங்காளம் விரும்புகிறது : பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies