வீரவநல்லூரில் பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை - உறவினர்கள் உடலுடன் சாலை மறியல்!
Mar 15, 2026, 01:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வீரவநல்லூரில் பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை – உறவினர்கள் உடலுடன் சாலை மறியல்!

Murugesan M by Murugesan M
Jul 18, 2025, 02:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தனியார் பள்ளி வளாகத்தில் இருந்த வாகனத்தின் மீது உறவினர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டது.

வீரவநல்லூர் அருகே உள்ள மானாபரநல்லூர் பகுதியைச் சேர்ந்த சபரிகண்ணன் என்பவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 4ஆம் தேதி மாணவர் சபரிகண்ணனை ஆசிரியர் கண்டித்த நிலையில், வார விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர், பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த மாணவரை, ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மாணவர், அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவரின் சடலத்தைக் கொண்டு வந்த வாகனத்துடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நெல்லை – அம்பை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் உயரதிகாரிகள், மாணவரின் உறவினர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என உறுதியளித்தனர். இதனை அடுத்து, மாணவரின் உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

முன்னதாக, தனியார் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மாணவரின் உறவினர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதில், 2  பள்ளி பேருந்துகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: உறவினர்கள் சாலை மறியல்Private matriculation school student in Veeravanallur commits suicide by consuming poison; relatives block road with bodyபள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
ShareTweetSendShare
Previous Post

மதுரை : மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில் சாட்சிகள் 5 பேர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்!

Next Post

நெதர்லாந்து : பூத்து குலுங்கும் துலிப் மலர்கள்!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies