வீரவநல்லூரில் பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை - உறவினர்கள் உடலுடன் சாலை மறியல்!
Sep 12, 2026, 09:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வீரவநல்லூரில் பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை – உறவினர்கள் உடலுடன் சாலை மறியல்!

Murugesan M by Murugesan M
Jul 18, 2025, 02:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தனியார் பள்ளி வளாகத்தில் இருந்த வாகனத்தின் மீது உறவினர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டது.

வீரவநல்லூர் அருகே உள்ள மானாபரநல்லூர் பகுதியைச் சேர்ந்த சபரிகண்ணன் என்பவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 4ஆம் தேதி மாணவர் சபரிகண்ணனை ஆசிரியர் கண்டித்த நிலையில், வார விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர், பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த மாணவரை, ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மாணவர், அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவரின் சடலத்தைக் கொண்டு வந்த வாகனத்துடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நெல்லை – அம்பை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் உயரதிகாரிகள், மாணவரின் உறவினர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என உறுதியளித்தனர். இதனை அடுத்து, மாணவரின் உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

முன்னதாக, தனியார் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மாணவரின் உறவினர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதில், 2  பள்ளி பேருந்துகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: உறவினர்கள் சாலை மறியல்Private matriculation school student in Veeravanallur commits suicide by consuming poison; relatives block road with bodyபள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை : மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில் சாட்சிகள் 5 பேர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்!

Next Post

நெதர்லாந்து : பூத்து குலுங்கும் துலிப் மலர்கள்!

Related News

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies