ஆளுங்கட்சியினரின் அராஜகம் : அஞ்சி நடுங்கும் அதிகாரிகள்!
Oct 26, 2025, 05:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆளுங்கட்சியினரின் அராஜகம் : அஞ்சி நடுங்கும் அதிகாரிகள்!

Web Desk by Web Desk
Jul 18, 2025, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளின் தொடர் அராஜகத்தால் அரசு அதிகாரிகள் தங்களின் பணியைச் சுதந்திரமாகச் செய்ய முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையே தன் கட்டுப்பாட்டில் இருப்பது போல திமுக மண்டலக்குழுத் தலைவர் மிரட்டும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நான் சொல்வதை கேட்டு நடப்பதாக இருந்தால் இருங்கள். இல்லையென்றால் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சொல்லி உங்கள் வீட்டில் விசாரணை நடத்தச் சொல்வேன்.

சென்னை திருவொற்றியூரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழும் நிலையிலிருந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருந்த மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றியதாகத் தமிழக அரசின் விருதைப் பெற்ற திமுக நிர்வாகி தனியரசு தான் இத்தகைய மோசமான ஆடியோவுக்கு சொந்தக்காரர்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராகி திமுக மண்டலக்குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அவரது நடத்தை முற்றிலும் மாறிவிட்டதாகப் புகார் எழுந்த நிலையில், திருவொற்றியூர் மண்டலத்தில் பணியாற்றி வரும் மின்துறை அதிகாரிக்குப் பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் ஆடியோ சமூகவலைத்தளங்களில் பரவிவருகிறது.

மின்சார வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய தொகையை திமுகவினர் பலர் செலுத்தாத நிலையில், திமுகவினர் அப்படி தான் இருப்பார்கள் என்பதோடு, தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் இணைந்து கொள்ளையடித்ததாகவும் தனியரசு மின்சார வாரிய அதிகாரியை மிரட்டியுள்ளார். உடனடியாக தனக்கு வர வேண்டிய பணத்தைத் தரவில்லை எனில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் பேசி வீட்டில் சோதனை நடத்தச் சொல்வேன் எனவும் அவர் மிரட்டிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அரசு அதிகாரி ஒருவரிடம் எப்படிப் பேச வேண்டும் என்ற நாகரீகத்தைச் சிறிதளவும் கடைப் பிடிக்காத திமுக மண்டலக்குழுத் தலைவர் தனியரசுவின் மிரட்டல் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையையே தன் கட்டுப்பாட்டில் இருப்பது போலப் பேசிய தனியரசுவின் மிரட்டலுக்குப் பயந்து அந்த மின்சாரத்துறை அதிகாரி பணிமாறுதல் பெற்றுச் சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது ஒருபுறமிருக்கச் சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலத்தில் செயல்பட்டு வரும் நூலகத்திலிருந்த மேஜையில் அதிமுகவினரின் நாட்காட்டி தென்பட்டுள்ளது. அதனைக் கட்டு ஆத்திரமடைந்த மண்டலக் குழு தலைவர் ரவிச்சந்திரன், பகுதி நேர நூலக ஊழியர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். நூலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பெண்கள் என்றும் பாராமல் ஒருமையில் பேசி ரவிச்சந்திரன் மிரட்டல் விடுக்கும் காட்சிகளும் திமுகவினரின் அதிகாரப்போக்கை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது.

ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருவொற்றியூர் பகுதியில் சாலை போடும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளைத் தாக்கியதாக அத்தொகுதியின் எம்எல்ஏ கே.பி.பி சங்கர் மீது புகார் எழுந்தது. அரசுப்பணியில் இருக்கும் அதிகாரிகளை ஆளுங்கட்சியினர் மிரட்டுவதும், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாகி வருவது அரசு அதிகாரிகள் தங்களின் பணியைச் சுதந்திரமாகச் செயல்பட முடியாத சூழலை உருவாக்கியுள்ளது.

Tags: Ruling party's anarchy: Officials tremble in fearஅஞ்சி நடுங்கும் அதிகாரிகள்அராஜகம்திமுக உள்ளாட்சிதிமுக மண்டலக்குழுத் தலைவர் மிரட்டும் ஆடியோ
ShareTweetSendShare
Previous Post

“Spam content” சர்ச்சையால் அதிரடி : 1 கோடி கணக்குகளுக்கு பூட்டுப்போட்ட மெட்டா!

Next Post

சீனா, ரஷ்யா தயவு வேண்டாம் : டைட்டானியம் உற்பத்தியில் சாதனை படைக்கும் இந்தியா!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies