சீனா, ரஷ்யா தயவு வேண்டாம் : டைட்டானியம் உற்பத்தியில் சாதனை படைக்கும் இந்தியா!
Sep 19, 2026, 09:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சீனா, ரஷ்யா தயவு வேண்டாம் : டைட்டானியம் உற்பத்தியில் சாதனை படைக்கும் இந்தியா!

Murugesan M by Murugesan M
Jul 18, 2025, 09:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரம்மோஸ் ஏவுகணைக்குத் தேவையான டைட்டானியம் மற்றும் SUPER  ALLOYS உற்பத்தியில், இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது. இது, நாட்டின் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்துவதோடு, சர்வதேச அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவத்தையும் பறைசாற்றுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

நாட்டின் பாதுகாப்புத் துறையில் தற்சார்பை அடைவதிலும் முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ உபகரணங்களை உருவாக்க வெளிநாடுகளைச் சார்ந்து இருப்பதைக் குறைப்பதிலும்  இந்திய பாதுகாப்புத் துறையின் நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன.

வணிக விமானப் போக்குவரத்து முதல் மருத்துவம் தொடங்கி ராணுவ பாதுகாப்பில் அதிநவீன போர் தளவாடங்கள் மற்றும்  விண்கல வடிவமைப்பு வரை புரட்சியை ஏற்படுத்தும் வகையில், விண்வெளித் துறையில் டைட்டானியம் மற்றும் super alloys பொருட்களின் பங்கு மிக முக்கிய பங்காற்றுகின்றன.

முதலில் டைட்டானியம் சிறந்த வலிமை-எடை விகிதத்தைக் கொண்டுள்ளது. அதாவது இது எஃகுக்கு இணையான வலிமையை வழங்கும் அதேநேரம், மிக இலகுவாகவும் இருக்கும். ஒரு விமானத்தின் எடை குறைப்பு, அதன் வேகம், சூழ்ச்சித்திறன் மற்றும் எரிபொருள் செயல்திறனை மேம்படுத்துகிறது.

டைட்டானியம் அரிப்பை அதிகபட்சம் எதிர்க்கிறது. இந்த எதிர்ப்பு விமானத்தின் பராமரிப்பு செலவுகளை வெகுவாக குறைத்து, விமானத்தின் ஆயுட்காலத்தை அதிகரிக்க உதவுகிறது.

மேலும், டைட்டானியம் உயர் வெப்பநிலை செயல்திறன் உடையதாகும். இந்த பண்பு குறிப்பாகத் தீவிர வெப்பத்துக்கு உட்படும்  போர்விமானத்தின் இயந்திர பாகங்களுக்குப் பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. அதுமட்டுமில்லாமல், விமான சூழ்ச்சிகளின் போது மீண்டும் மீண்டும் அழுத்தத்தை அனுபவிக்கும் விமானங்களுக்கு  டைட்டானியம்  கட்டமைப்பு தோல்விகளைத் தடுக்க உதவுகிறது.

டைட்டானியம் காந்தமற்றது என்பதால் வழிசெலுத்தல் மற்றும் இலக்கு அமைப்புகள் போன்றவற்றில் காந்த குறுக்கீடு இருக்கக்கூடிய சில இராணுவ பயன்பாடுகளுக்கு  மிகவும் சாதகமாக அமைகிறது. விமானக் கட்டமைப்பில் சிக்கலான வடிவங்கள் மற்றும் கூறுகளை உருவாக்குவதை டைட்டானியம் எளிதாக்கிறது.

எஃகுவை விட விலை அதிகமாக இருந்தாலும் அதன் தனித்துவமான பண்புகள் போர் விமானக்  கட்டுமானத்தின் கடினமான தேவைகளுக்கு ஒரு மதிப்புமிக்க வேதியல் பொருளாக டைட்டானியம் அமைகிறது.

குறிப்பாக பிரம்மோஸ் போன்ற அதிநவீன க்ரூஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்க இந்த டைட்டானியம் மற்றும் super alloys பொருட்கள் மிக முக்கியமானவையாகும்.

இதுவரை ரஷ்யா, சீனா, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் மட்டுமே டைட்டானியம் மற்றும் super alloys பொருட்களின் உற்பத்தித் திறனைப் பெற்றுள்ளன.  இந்த நாடுகளின் வரிசையில் இப்போது இந்தியாவும் இணைந்துள்ளது.

லக்னோவில் உள்ள PTC இண்டஸ்ட்ரீஸ், பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை அமைப்புகளை உருவாக்குவதற்கு அவசியமான டைட்டானியம் மற்றும் super alloys பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.

அதிநவீன போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்கள் கட்டுவதற்கு மிகவும் அத்தியாவசியமான டைட்டானியம் மற்றும் super alloys  பொருட்களை உற்பத்தி செய்யும் இந்த திறன்களும் தொழில்நுட்பங்களும் இதற்கு முன் இந்தியாவிடம் இல்லாமல் இருந்தது.

அதற்காக, வெளிநாடுகளைச் சார்ந்திருக்க வேண்டியிருந்த நிலைமை இருந்தது. இப்போது அந்த  திறன்களும் தொழில்நுட்பங்களும் உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்டுள்ளன. அரிதான கனிமப் பொருட்களின் விநியோகத்தில் கட்டுப்பாடுகளை விதித்து இந்தியாவைச் சீனா மிரட்டியது. இந்தியாவை எந்த நாடும் மிரட்ட முடியாது என்பதை இந்தியா நிரூபித்துள்ளது.  அதன் விளைவாக டைட்டானியம் மற்றும் super alloys பொருட்களை இந்தியா உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில், டைட்டானியம் மற்றும் super alloys பொருட்களைத் தயாரிக்கும் ஒரே தனியார் துறை நிறுவனமான  PTC இண்டஸ்ட்ரீஸ், ஆண்டுக்கு 1500 டன் உற்பத்தியை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஆண்டுக்கு 6,500 டன் உற்பத்தியை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ரஷ்யா ஆண்டுக்கு சுமார் 1,75,000 டன் டைட்டானியம் மற்றும் super alloys பொருட்களை உற்பத்தி செய்கிறது, இது உலகளாவிய உற்பத்தியில் 35 சதவீதமாகும். 2022 ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, இந்தப் பொருட்களின் விநியோகச் சங்கிலி உலக அளவில் சீர்குலைந்துள்ளது. சீனாவும்அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதிக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

இந்தச் சூழலில், ரஷ்யா மற்றும் சீனாவிலிருந்து டைட்டானியத்தை வாங்க விரும்பாத அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், இனி டைட்டானியம் மற்றும் super alloys பொருட்களுக்கு இந்தியாவை நம்பி இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags: SUPER  ALLOYS உற்பத்தியில்இந்தியா தன்னிறைவுchinaபிரம்மோஸ் ஏவுகணைRussia please don't: India sets record in titanium productionடைட்டானியம்
Share
Tweet
SendShare
Previous Post

ஆளுங்கட்சியினரின் அராஜகம் : அஞ்சி நடுங்கும் அதிகாரிகள்!

Next Post

அமெரிக்காவை குறிவைக்கும் இந்தியா : 12,000 கி.மீ பயணிக்கும் புதிய குண்டுவீச்சு விமானம்!

Related News

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies