திமுக ஆட்சியில் மடாதிபதிகளுக்கும், சமயப் பெரியோர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது - நயினார் நாகேந்திரன்
Jul 20, 2025, 04:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியில் மடாதிபதிகளுக்கும், சமயப் பெரியோர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது – நயினார் நாகேந்திரன்

Web Desk by Web Desk
Jul 20, 2025, 10:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சியில் மடாதிபதிகளுக்கும், சமயப் பெரியோர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், காவல்துறை நாளை மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்தது. தொடர்ந்து மத குருமார்களையும், ஆன்மீகப் பெரியோர்களையும் பல சொல்ல முடியாத இன்னல்களுக்கு உட்படுத்தி வருகிறது இந்தத் திமுக அரசு என தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்சியில் எந்தவொரு தனி மனிதனைப் போலவே, மடாதிபதிகளுக்கும், சமயப் பெரியோர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழலே நிலவி வருகிறது. தற்போது விசாரணை என்ற பெயரில் மதுரை ஆதீனத்தையும் தொந்தரவு செய்து வருகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு காவல்துறையை வைத்து. 70 வயதைக் கடந்த போற்றுதலுக்குரிய மதுரை ஆதீனம் ஶ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் உடல்நலம் குன்றியுள்ள நிலையில் இரண்டு நாட்கள் முன்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சற்று குணமடைந்து திரும்பியுள்ளார்.

அதுவும் இந்த ஞாயிற்றுக்கிழமை நாளில் கூட விசாரணை நடத்தத் தேடி வருவதெல்லாம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த அரசு ஆன்மீக விவகாரத்தில் செய்யும் அத்துமீறல்களையும், இந்து விரோத செயல்களையும் தட்டிக்கேட்கும் சமயப்பெரியவர்களுக்குத் தொடர்ச்சியாக ஏதாவதொரு மன அழுத்தத்தை  கொடுத்து வருகிறது என்பதைப் பார்க்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே, இனியும் காவல்துறையின் அத்துமீறல்களை தமிழக பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது, காவல் துறையின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வருவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரையில் தமிழக பாஜகவின் மாவட்டத் தலைவர்கள் மதுரை ஆதீனத்தின் பக்கபலமாக  அங்கே இருப்பார்கள் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

நாகூரில் நடைபெறவிருக்கும் விவசாய பெருமக்களுக்கு ஆதரவான போராட்டத்தை முடித்துக்கொண்டு நானும் அங்கே செல்லவிருக்கிறேன். ஞானசம்பந்தர் காலம் முதல் புகழோடும், கீர்த்தியோடும் விளங்கி வரும் மதுரை ஆதீனத்தின் மாண்பைக் காக்க என்றும் பாஜக துணை நிற்கும் என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags: DMK governmentDMK regimeTamil Nadu BJP state president Nainar NagendranMadurai Aadeena enquiry
ShareTweetSendShare
Previous Post

நடப்பாண்டில் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை!

Next Post

குற்றங்களைத் தான் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால்,  குப்பைகளைக் கூட தடுக்க இயலாதா? – நயினார் நாகேந்திரன்

Related News

20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் மரணம்!

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் – 104 பாலஸ்தீனியர்கள் பலி!

கீழ் திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆந்திர முதல்வர்!

நீர் வரத்து உயர்வு – குற்றாலத்தில் எந்த அருவியில் குளிக்கலாம்?

வால்பாறை கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!

திருக்கோவிலூர் அருகே கார் டயர் வெடித்து விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடி கிருத்திகை – அறுபடை வீடுகளில் குவிந்த பக்தர்கள்!

பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் ஆடி மாத கூழ்வார்த்தல் விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் பாபி சிம்ஹா, சுவாமி தரிசனம்!

சாங்குர் பாபு மதமாற்ற விவகாரம் – சென்னை வருகிறது என்ஐஏ!

குடும்ப தகராறு – மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவன்!

செல்போன் மற்றும் சமூக வலைதள பழக்கங்களில் இருந்து வெளியேறினால் மட்டுமே போட்டி தேர்வுகளில் சாதிக்க முடியும் – சைலேந்திரபாபு

மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் – நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை!

ஆடி கிருத்திகை – வடபழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

கிராமங்களை தன்னிறைவு மற்றும் வளர்ச்சி பெற்றதாக மாற்ற வேண்டும் – இளைஞர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு – வெள்ளத்தில் சிக்கித்தவித்த முதியவர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies