இந்தியாவை கலக்கிய கார் திருடன் சிக்கியது எப்படி?
Jul 21, 2025, 06:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இந்தியாவை கலக்கிய கார் திருடன் சிக்கியது எப்படி?

Web Desk by Web Desk
Jul 21, 2025, 01:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவையே கதிகலங்கச் செய்த கார் திருடனை, புதுச்சேரி அருகே தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளது மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சொகுசு கார்களை குறிவைத்துத் திருடிய நபர், தமிழக போலீசாரிடம் சிக்கியது எப்படி? என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

தொப்பி மற்றும் முகக்கவசத்துடன் எந்த வித அலட்டலும் இல்லாமல் வந்து பல லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை திருடிச் செல்லும் இவரின் பெயர் சத்யேந்திர சிங் ஷெகாவத்…. ராஜஸ்தானைச் சேர்ந்த இந்த நபர் தான் இந்தியாவின் முக்கிய கார் திருடனாக காவல்துறையினரால் அறியப்படுகிறார்.

கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி சென்னை அண்ணா நகர் கதிரவன் காலனியில் இருந்து திருடப்பட்ட Toyotta fortuner காரின் உரிமையாளர் எத்திராஜ் ரத்தினம் என்பவர், சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில் புதுச்சேரியில் மேலும் ஒரு சொகுசு காரை திருட முயன்ற போது சத்யேந்திர சிங் ஷெகாவத்தை சுற்றி வளைத்து மடக்கினர்.

விசாரணையில் இந்த நபர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, Toyotta ஷோருமில் சர்வீஸ்-க்காக வரும் கார்களை குறிவைத்து, அதில் GPS tracker-ஐ வைத்துக் கண்காணித்து பின்னர் இரவு  நேரத்தில் அந்த காரை திருடிச் செல்வது தெரியவந்தது. ஒரு காரை திருடினால் அதனை 4 நாட்களில் சொந்த ஊரான ராஜஸ்தானிற்கு கொண்டு சென்று பின்னர் அதனை நேபாள் அல்லது வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருப்பவர்களிடம் விற்று விடுவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனிடையே, கார்களை திருடும் சத்யேந்திர சிங்கிற்கும், டொயோட்டா ஷோரூம் பணியாளர்களுக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாகக் காரை பறிகொடுத்த எத்திராஜ் ரத்தினம் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளாக கார் திருடுவதையே பிரதான தொழிலாகச் செய்து வரும் சத்யேந்திர சிங், இத்தனை நாட்களாக காவல்துறையிடம் சிக்காமல் தப்பியது எப்படி என்ற கேள்வியும் எழாமல் இல்லை…. இருந்த போதிலும், தமிழக சைபர் கிரைம் காவல்துறையின் ஒத்துழைப்பு இல்லாமல் சத்யேந்திர சிங்-ஐ கைது செய்திருக்க முடியாது என்று கூறியுள்ளார் புகார்தாரர் எத்திராஜ் ரத்தினம்.

Tags: CHENNAI CRIME NEWSTODAY CRIME NEWSHow was the car thief who shook India caught?கார் திருடன் சிக்கியது எப்படி?கார் திருடன்
ShareTweetSendShare
Previous Post

சிவகங்கை : முதியவர் கொலை – 5 மணி நேர தேடுதலுக்கு பின் கண்டெடுக்கப்பட்ட தலை!

Next Post

பள்ளிபாளையத்தில் கடனுக்காக கிட்னி விற்பனை : தொழிலாளியை மிரட்டும் வீடியோ வெளியீடு!

Related News

செங்கோட்டையில் அதிமுக, பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது : கராத்தே தியாகராஜன்

ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பவர்களுக்கே வாக்களிப்போம் : ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பொதுமக்கள்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பத்து படுகொலைகள் நிகழ்ந்துள்ளன : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

ஆரம்பாக்கம் சிறுமிக்கு நீதி கேட்டுக் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற பாமகவினர்!

திமுக ஆட்சியில் பெரிய முறைகேடுகள் : செல்லூர் ராஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

எந்தவொரு விவாதத்தில் இருந்தும் ஓடி போக மாட்டோம் – ஜே.பி.நட்டா

கர்நாடகா : ஊழியரை மிரட்டி மசாஜ் செய்ய வைத்த தலைமை ஆசிரியர்!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கும் தீர்மானத்துக்கு மனு தாக்கல்!

மும்பை ரயில் குண்டு வெடிப்பில் 189 பேர் உயிரிழந்த விவகாரம் : குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் விடுவித்து உயர்நீதிமன்றம்!

கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் மறைவு!

புதுச்சேரி நீதிமன்றத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!

4வது டெஸ்ட் போட்டி – மான்செஸ்டரில் இந்திய அணி!

கர்நாடகா : ஹாசன் – சோலாப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து!

மத்திய காசாவில் மக்கள் வெளியேற உத்தரவிட்ட இஸ்ரேல்!

மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சஸ்பெண்ட் : களைகட்டிய கள்ளச் சந்தை மதுபான விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies