இந்தியாவை கலக்கிய கார் திருடன் சிக்கியது எப்படி?
Jun 22, 2026, 11:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இந்தியாவை கலக்கிய கார் திருடன் சிக்கியது எப்படி?

Murugesan M by Murugesan M
Jul 21, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவையே கதிகலங்கச் செய்த கார் திருடனை, புதுச்சேரி அருகே தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளது மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சொகுசு கார்களை குறிவைத்துத் திருடிய நபர், தமிழக போலீசாரிடம் சிக்கியது எப்படி? என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

தொப்பி மற்றும் முகக்கவசத்துடன் எந்த வித அலட்டலும் இல்லாமல் வந்து பல லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை திருடிச் செல்லும் இவரின் பெயர் சத்யேந்திர சிங் ஷெகாவத்…. ராஜஸ்தானைச் சேர்ந்த இந்த நபர் தான் இந்தியாவின் முக்கிய கார் திருடனாக காவல்துறையினரால் அறியப்படுகிறார்.

கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி சென்னை அண்ணா நகர் கதிரவன் காலனியில் இருந்து திருடப்பட்ட Toyotta fortuner காரின் உரிமையாளர் எத்திராஜ் ரத்தினம் என்பவர், சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில் புதுச்சேரியில் மேலும் ஒரு சொகுசு காரை திருட முயன்ற போது சத்யேந்திர சிங் ஷெகாவத்தை சுற்றி வளைத்து மடக்கினர்.

விசாரணையில் இந்த நபர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, Toyotta ஷோருமில் சர்வீஸ்-க்காக வரும் கார்களை குறிவைத்து, அதில் GPS tracker-ஐ வைத்துக் கண்காணித்து பின்னர் இரவு  நேரத்தில் அந்த காரை திருடிச் செல்வது தெரியவந்தது. ஒரு காரை திருடினால் அதனை 4 நாட்களில் சொந்த ஊரான ராஜஸ்தானிற்கு கொண்டு சென்று பின்னர் அதனை நேபாள் அல்லது வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருப்பவர்களிடம் விற்று விடுவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனிடையே, கார்களை திருடும் சத்யேந்திர சிங்கிற்கும், டொயோட்டா ஷோரூம் பணியாளர்களுக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாகக் காரை பறிகொடுத்த எத்திராஜ் ரத்தினம் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளாக கார் திருடுவதையே பிரதான தொழிலாகச் செய்து வரும் சத்யேந்திர சிங், இத்தனை நாட்களாக காவல்துறையிடம் சிக்காமல் தப்பியது எப்படி என்ற கேள்வியும் எழாமல் இல்லை…. இருந்த போதிலும், தமிழக சைபர் கிரைம் காவல்துறையின் ஒத்துழைப்பு இல்லாமல் சத்யேந்திர சிங்-ஐ கைது செய்திருக்க முடியாது என்று கூறியுள்ளார் புகார்தாரர் எத்திராஜ் ரத்தினம்.

Tags: கார் திருடன்CHENNAI CRIME NEWSTODAY CRIME NEWSHow was the car thief who shook India caught?கார் திருடன் சிக்கியது எப்படி?
ShareTweetSendShare
Previous Post

புதுப்பொலிவு பெறும் விக்டோரியா அரங்கம்!

Next Post

திருநங்கையாக 20 ஆண்டுகள் : வங்கதேச இளைஞர் சிக்கியது எப்படி?

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies