நீட் யுஜி மறு தேர்வு எழுதும் லட்சக்கணக்கான மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பிரதமர் மோடி டெல்லியில் தனது பயணத்தை சுமார் 45 நிமிடங்கள் தாமதப்படுத்திய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு, முறைகேடுகள் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று நாடு முழுவதும் நீட் மறு தேர்வு நடத்தப்பட்டது.
இதனிடையே 12-வது சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்க மேற்கு வங்கம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் டெல்லி திரும்பினார்.
அப்போது பிரதமர் மோடி வேண்டுமென்றே தனது பயணத்தை சுமார் 45 நிமிடங்கள் தாமதப்படுத்தி கிளம்பிச் சென்றார்.
தான் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது மேற்கொள்ளப்படும் போக்குவரத்து கட்டுப்பாடுகள், நீட் மறு தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு இடையூறாக அமையக் கூடாது என்பதற்காக அவர் இவ்வாறு செய்தார்.
மாணவர்கள் எந்தவித சிரமமும் இன்றி தேர்வு மையங்களை அடைவதை உறுதி செய்வதற்காக பிரதமர் மோடி எடுத்த இந்த நடவடிக்கை, பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
















