அம்மோனியா வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் இறால் ஆலையில் அம்மோனியா வாயுக்கசிவால் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தார். 70க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி, ராஜீவ் காந்தி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குறித்து பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று விசாரித்தார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சிகிச்சை பெற்று வருபவர்கள் கவலைக்கிடமாக உள்ளதாகவும், கண், காது உள்ளிட்ட இடங்களில் ரத்தக்கசிவு உள்ளதாகவும் வேதனை தெரிவித்தார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கான இழப்பீட்டு தொகையை 5 லட்சம் ரூபாய் வரை உயர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
















