குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலைக்குரியது என தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிரம்மகுமாரிகள் அமைப்பின் 90வது ஆண்டு துவக்க விழா மற்றும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய ஜே.சி.டி பிரபாகர், ஒரு காலத்தில் பெற்றோர் அன்புடன் உணவூட்டிய பணியை இன்று செல்போன் செய்து வருவதாக குறிப்பிட்டார். தனது வாழ்க்கையில் ஏற்பட்ட நெஞ்சுவலியை யோகா மற்றும் தியானத்தின் மூலம் கட்டுப்படுத்த முடிந்ததாகவும், மன அமைதி கிடைத்தால் கோபம் குறையும் என்றும் தெரிவித்தார்.
பிரம்மகுமாரிகள் அமைப்பு 90 ஆண்டுகளாக மனிதகுல நலனுக்காக ஆற்றி வரும் சேவை பாராட்டத்தக்கது என்றும் ஜேசிடி பிரபாகரன் தெரிவித்தார்.
















