பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜாயின்ட் அவாமி ஆக்சன் கமிட்டி சார்பில் 19வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து ஜேஏஏசி அமைப்பினர் 19வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர் போராட்டத்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்களுக்கு கிடைக்க வேண்டிய உணவு பொருட்களை பாகிஸ்தான் அரசு தடுத்து நிறுத்தி உள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
















