தண்ணீர் பாட்டில் வேண்டும் என்பது தொடர்பாக எம்எல்ஏக்கள் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பேசியது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவையில் பேசிய தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களுக்கு டம்ளரில் தண்ணீர் கொடுப்பதால் ஊழியர்களுக்கு பணிச்சுமை ஏற்படுகிறது என்றும், அதற்கு பதிலாக பாட்டிலில் தண்ணீர் வைத்துவிட்டால் சுலபமாக இருக்கும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
அப்போது குறுக்கிட்ட திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம், பாட்டிலில் தண்ணீர் வழங்கினால் வீசி எறிய வாய்ப்புள்ளது என்றும், அப்படி தரவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்தார். உடனடியாக பேசிய திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு, ஓபிஎஸ் கூறியது அவருடைய தனிப்பட்ட அனுபவமா என்று அறிய விரும்புகிறேன் எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு, தூக்கி எறிய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் டம்ளரை கூட தூக்கி அடிப்பார்கள் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தண்ணீர் பாட்டில்கள் தொடர்பாக எம்எல்ஏக்கள் பேசியது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
















