4 மாநில வாக்காளர் அடையாள அட்டைகளை சட்டவிரோதமாக வைத்திருப்பதாக கூறப்படும் விவகாரத்தில், நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் வாக்காளராக பதிவு செய்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், அந்தந்த மாநிலங்களின் வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த 2019-ல் பெங்களூரு காவல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை ஏற்ற நீதிமன்றம், விசாரணைக்கு ஆஜராகும்படி பிரகாஷ் ராஜுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்டை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் எந்நேரத்திலும் கைதாகலாம் என கூறப்படுகிறது.
















