முன்னாள் எம்பி ஞானதிரவியத்திற்கு சம்மன் வழங்காத காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!
Jan 14, 2026, 11:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முன்னாள் எம்பி ஞானதிரவியத்திற்கு சம்மன் வழங்காத காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Jul 21, 2025, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதபோதகர் தாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் எம்பி ஞானதிரவியத்திற்கு ஆறு மாதங்களாகச் சம்மன் வழங்காத காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு பாளையங்கோட்டை சிஎஸ்ஐ தேவாலய அலுவலகத்துக்குச் சென்ற மதபோதகர் காட்ஃப்ரே நோபிள் தாக்கப்பட்ட புகாரில் முன்னாள் எம்பி ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க நெல்லை நீதிமன்றத்திற்கு உத்தரவிடக்கோரி மதபோதகர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தாக்குதல் வழக்கு தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்க நெல்லை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன்  முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, முன்னாள் எம்பி ஞானதிரவியத்திற்கு எதிரான வழக்கின் ஆவணங்கள் உயர்நீதிமன்ற பதிவுத்துறையின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கடந்த நவம்பர் மாதமே ஆஜராகக்கூறி, ஞானதிரவியத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக நெல்லை நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, ஆறு மாதங்களாகச் சம்மன் வழங்காதது ஏன் என்றும், ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்பி, எம்எல்ஏக்களுக்கு காவல்துறையினர் சம்மன் வழங்க மாட்டீர்களா எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராகச் சம்மன் வழங்க இயலாது எனத் தெரிவித்துவிட்டால், சம்மன் அனுப்புவதற்காகத் தனிப்பிரிவை உருவாக்க நேரிடும் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், முன்னாள் எம்பி ஞானதிரவியத்திற்கு சம்மன் அனுப்பியது குறித்தும், அவருக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்Madras High Court condemns police for not issuing summons to former MP Gnanadhiraviyam for six months
ShareTweetSendShare
Previous Post

ஓரணியில் தமிழ்நாடு : OTP எண்ணை பெறுவதற்கு திமுகவிற்கு இடைக்கால தடை – உயர்நீதிமன்ற உத்தரவு!

Next Post

திராவிட மாடல் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் – அர்ஜுன் சம்பத்

Related News

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies