துார் வார ஒதுக்கிய ரூ.97 கோடி எங்கே? : பாலைவனமாக மாறிய பனைமரத்துப்பட்டி ஏரி!
Sep 8, 2025, 11:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

துார் வார ஒதுக்கிய ரூ.97 கோடி எங்கே? : பாலைவனமாக மாறிய பனைமரத்துப்பட்டி ஏரி!

Web Desk by Web Desk
Jul 21, 2025, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சேலம் பனைமரத்துப்பட்டி ஏரியை போதிய பராமரிப்பின்றி பாலைவனமாகக் காட்சியளிக்கிறது. ஏரியைத் தூர்வார ஒதுக்கப்பட்ட தொகையில் முறைகேடு நடந்திருப்பதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

1911ம் ஆண்டு சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டியில் 2 ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பளவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது தான் இந்த ஏரி. ஒரு காலத்தில் சேலம் மாநகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்த இந்த பனைமரத்துப்பட்டி ஏரி தற்போது கருவேலமரங்களின் கூடாரமாக மாறி வருகிறது.

ஏரியை முறையாகத் தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காத அதிமுக, திமுக அரசுகளால் ஏரியிலிருந்து குடிநீர் எடுப்பது முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

சேலம் மாநகரின் குடிநீர் தேவையை மட்டுமின்றி பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதியாகவும் விளங்கிவந்த பனைமரத்துப்பட்டி ஏரி தற்போது பாலைவனமாகக் காட்சியளிக்கிறது. இந்த ஏரியைத் தூர்வார கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட 97 கோடி  ரூபாயில் எந்த பணிகளும் நடைபெறாததால், அந்த தொகை எங்கே சென்றது என்ற கேள்வியை விவசாயிகள் எழுப்புகின்றனர்.

பனைமரத்துப்பட்டி ஏரியைத் தூர்வாருவதற்காக ஒதுக்கப்பட்ட தொகையை முறையாகப் பயன்படுத்தித் தூர்வாரி மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வலியுறுத்திப் போராடிய விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்வதையும், கைது செய்வதையுமே வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகவும் காவல்துறை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குடிநீர் தேவைக்காகவும், பாசன வசதிக்காகவும் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட ஏரியை முறையாகப் பாதுகாக்கத் தவறியதால் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பயனற்ற நிலையில் காட்சியளிக்கிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் அரசு ஒதுக்கிய தொகையை முறையாகப் பயன்படுத்தி பனைமரத்துப்பட்டி ஏரியைத் தூர்வாரி பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Where is the Rs. 97 crore allocated by Durvara? : The Palmyra Lake has turned into a desertதுார் வார ஒதுக்கிய ரூ.97 கோடி எங்கே?பனைமரத்துப்பட்டி ஏரி
ShareTweetSendShare
Previous Post

திருநங்கையாக 20 ஆண்டுகள் : வங்கதேச இளைஞர் சிக்கியது எப்படி?

Next Post

கடைமடைக்கு வராத தண்ணீர் : கெலவரப்பள்ளி விவசாயிகள் புகார்!

Related News

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

Load More

அண்மைச் செய்திகள்

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies