துார் வார ஒதுக்கிய ரூ.97 கோடி எங்கே? : பாலைவனமாக மாறிய பனைமரத்துப்பட்டி ஏரி!
Jan 14, 2026, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

துார் வார ஒதுக்கிய ரூ.97 கோடி எங்கே? : பாலைவனமாக மாறிய பனைமரத்துப்பட்டி ஏரி!

Murugesan M by Murugesan M
Jul 21, 2025, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சேலம் பனைமரத்துப்பட்டி ஏரியை போதிய பராமரிப்பின்றி பாலைவனமாகக் காட்சியளிக்கிறது. ஏரியைத் தூர்வார ஒதுக்கப்பட்ட தொகையில் முறைகேடு நடந்திருப்பதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

1911ம் ஆண்டு சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டியில் 2 ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பளவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது தான் இந்த ஏரி. ஒரு காலத்தில் சேலம் மாநகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்த இந்த பனைமரத்துப்பட்டி ஏரி தற்போது கருவேலமரங்களின் கூடாரமாக மாறி வருகிறது.

ஏரியை முறையாகத் தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காத அதிமுக, திமுக அரசுகளால் ஏரியிலிருந்து குடிநீர் எடுப்பது முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

சேலம் மாநகரின் குடிநீர் தேவையை மட்டுமின்றி பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதியாகவும் விளங்கிவந்த பனைமரத்துப்பட்டி ஏரி தற்போது பாலைவனமாகக் காட்சியளிக்கிறது. இந்த ஏரியைத் தூர்வார கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட 97 கோடி  ரூபாயில் எந்த பணிகளும் நடைபெறாததால், அந்த தொகை எங்கே சென்றது என்ற கேள்வியை விவசாயிகள் எழுப்புகின்றனர்.

பனைமரத்துப்பட்டி ஏரியைத் தூர்வாருவதற்காக ஒதுக்கப்பட்ட தொகையை முறையாகப் பயன்படுத்தித் தூர்வாரி மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வலியுறுத்திப் போராடிய விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்வதையும், கைது செய்வதையுமே வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகவும் காவல்துறை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குடிநீர் தேவைக்காகவும், பாசன வசதிக்காகவும் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட ஏரியை முறையாகப் பாதுகாக்கத் தவறியதால் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பயனற்ற நிலையில் காட்சியளிக்கிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் அரசு ஒதுக்கிய தொகையை முறையாகப் பயன்படுத்தி பனைமரத்துப்பட்டி ஏரியைத் தூர்வாரி பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Where is the Rs. 97 crore allocated by Durvara? : The Palmyra Lake has turned into a desertதுார் வார ஒதுக்கிய ரூ.97 கோடி எங்கே?பனைமரத்துப்பட்டி ஏரி
ShareTweetSendShare
Previous Post

திருநங்கையாக 20 ஆண்டுகள் : வங்கதேச இளைஞர் சிக்கியது எப்படி?

Next Post

கடைமடைக்கு வராத தண்ணீர் : கெலவரப்பள்ளி விவசாயிகள் புகார்!

Related News

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies