மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அழுத்தம் காரணமாக விவசாய பயிற்சி முகாம் ரத்து - நயினார் நாகேந்திரன் கண்டனம்!
Sep 9, 2025, 01:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அழுத்தம் காரணமாக விவசாய பயிற்சி முகாம் ரத்து – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Web Desk by Web Desk
Jul 22, 2025, 10:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலின் சர்வதேச முன்னேற்ற கூட்டமைப்பும் தமிழகத் தோட்டக்கலைத்துறையும் ஒன்றிணைந்து இன்று முதல் நான்கு நாட்களுக்கு விவசாயிகளுக்காக நடத்தவிருந்த பயிற்சி முகாமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அழுத்தத்தின் பேரில் திமுக அரசு ரத்து செய்துள்ளது கண்டனத்திற்குரியது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், குறைந்த பாசன வசதியில் நிறைய மகசூலுடன் வேளாண்துறையில் புரட்சி செய்து கொண்டிருக்கும் இஸ்ரேலின் தொழில்நுட்பக் கலையை நமது தமிழக விவசாயிகளுக்குக் கற்றுத்தராமல் தடுப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
க்கு அப்படி என்ன ஆனந்தம்? இதுவரை ‘சித்தாந்தம்’ எனும் பெயரில் கமிஷன் பெறும் பொருட்டு, திமுகவின் ஊதுகுழலாக செயல்பட்டு, தொழிலாளர் நலனை சீரழித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தற்போது விவசாயிகள் நலனையும் சீரழிக்கத் துவங்கிவிட்டதாக தெரிவித்துளளார்.

இஸ்ரேல் பாலஸ்தீனத்துடன் போரிடுவதால், தமிழக விவசாயிகள் இஸ்ரேலின் வேளாண் நுட்பங்களைக் கற்றுக் கொள்ளக் கூடாது என்று சொல்வது எப்படி நியாயமாகும்? இஸ்ரேல் தொழில்நுட்பத்தின் பயனாக ஹரியானா-வின் தோட்டக்கலை உற்பத்தி கடந்த 14 ஆண்டுகளில் 37% உயர்ந்துள்ளது.

அதேபோல் பஞ்சாப் போன்ற மாநிலங்களும் இஸ்ரேல் கூட்டமைப்புடன் தங்களது வேளாண் உற்பத்தியை உயர்த்த முயற்சித்துவரும் வேளையில், ஓட்டுவங்கி அரசியலுக்காக, சிறுபான்மையினரைக் கவருவதாக நினைத்துக் கொண்டு ஏழை எளிய விவசாயிகளின் நலனைக் கைகழுவியுள்ளது திமுக அரசு.

புதிய விவசாய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள 100 விவசாயிகளை இஸ்ரேலுக்கு அனுப்ப அரசு தயாராக இருப்பதாக தமிழக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
அவர்களே உரைத்த நிலையில், தற்போது ஏன் இந்த புதிய நிலைப்பாடு?

இதை நிறுத்தியது ஏன்? தேர்தல் காலம் நெருங்கிவிட்டால், உழவர் நலன் கண்ணில் புலப்படாதா? வாக்கு வங்கி அரசியலுக்காக, உணவளிக்கும் விவசாயிகளின் நலனை அலட்சியப்படுத்தும் இந்தப் பாசிச திராவிட மாடல் கூட்டணி தனது மக்கள் விரோதப் போக்கால் விரைவில் வீழ்வது உறுதி என்றும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

 

Tags: nternational Progress Federation of IsraelDMK governmentMarxist Communist Party.Tamil Nadu BJP state president Nainar NagendranIsrael Tamil Nadu Horticulture Department
ShareTweetSendShare
Previous Post

ரஷ்யாவுக்கு படிக்க சென்ற மருத்துவ மாணவரை மீட்க பெற்றோர் கோரிக்கை!

Next Post

மரவள்ளிக்கிழங்குக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Related News

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

கோவை : உணவுக்கு ரூ.1,473 கட்டணமாக வசூலித்த ஸ்விக்கி நிறுவனம் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

ஜெர்மனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா- மர்தானி கேல் தற்காப்பு கலையை நிகழ்த்தி அசத்திய பெண்கள்!

தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. சோதனை – பீகார் இளைஞரிடம் விசாரணை!

நாட்டில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுகின்றன – முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கருத்து!

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies