மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அழுத்தம் காரணமாக விவசாய பயிற்சி முகாம் ரத்து - நயினார் நாகேந்திரன் கண்டனம்!
Jan 14, 2026, 06:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அழுத்தம் காரணமாக விவசாய பயிற்சி முகாம் ரத்து – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 22, 2025, 10:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலின் சர்வதேச முன்னேற்ற கூட்டமைப்பும் தமிழகத் தோட்டக்கலைத்துறையும் ஒன்றிணைந்து இன்று முதல் நான்கு நாட்களுக்கு விவசாயிகளுக்காக நடத்தவிருந்த பயிற்சி முகாமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அழுத்தத்தின் பேரில் திமுக அரசு ரத்து செய்துள்ளது கண்டனத்திற்குரியது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், குறைந்த பாசன வசதியில் நிறைய மகசூலுடன் வேளாண்துறையில் புரட்சி செய்து கொண்டிருக்கும் இஸ்ரேலின் தொழில்நுட்பக் கலையை நமது தமிழக விவசாயிகளுக்குக் கற்றுத்தராமல் தடுப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
க்கு அப்படி என்ன ஆனந்தம்? இதுவரை ‘சித்தாந்தம்’ எனும் பெயரில் கமிஷன் பெறும் பொருட்டு, திமுகவின் ஊதுகுழலாக செயல்பட்டு, தொழிலாளர் நலனை சீரழித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தற்போது விவசாயிகள் நலனையும் சீரழிக்கத் துவங்கிவிட்டதாக தெரிவித்துளளார்.

இஸ்ரேல் பாலஸ்தீனத்துடன் போரிடுவதால், தமிழக விவசாயிகள் இஸ்ரேலின் வேளாண் நுட்பங்களைக் கற்றுக் கொள்ளக் கூடாது என்று சொல்வது எப்படி நியாயமாகும்? இஸ்ரேல் தொழில்நுட்பத்தின் பயனாக ஹரியானா-வின் தோட்டக்கலை உற்பத்தி கடந்த 14 ஆண்டுகளில் 37% உயர்ந்துள்ளது.

அதேபோல் பஞ்சாப் போன்ற மாநிலங்களும் இஸ்ரேல் கூட்டமைப்புடன் தங்களது வேளாண் உற்பத்தியை உயர்த்த முயற்சித்துவரும் வேளையில், ஓட்டுவங்கி அரசியலுக்காக, சிறுபான்மையினரைக் கவருவதாக நினைத்துக் கொண்டு ஏழை எளிய விவசாயிகளின் நலனைக் கைகழுவியுள்ளது திமுக அரசு.

புதிய விவசாய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள 100 விவசாயிகளை இஸ்ரேலுக்கு அனுப்ப அரசு தயாராக இருப்பதாக தமிழக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
அவர்களே உரைத்த நிலையில், தற்போது ஏன் இந்த புதிய நிலைப்பாடு?

இதை நிறுத்தியது ஏன்? தேர்தல் காலம் நெருங்கிவிட்டால், உழவர் நலன் கண்ணில் புலப்படாதா? வாக்கு வங்கி அரசியலுக்காக, உணவளிக்கும் விவசாயிகளின் நலனை அலட்சியப்படுத்தும் இந்தப் பாசிச திராவிட மாடல் கூட்டணி தனது மக்கள் விரோதப் போக்கால் விரைவில் வீழ்வது உறுதி என்றும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

 

Tags: nternational Progress Federation of IsraelDMK governmentMarxist Communist Party.Tamil Nadu BJP state president Nainar NagendranIsrael Tamil Nadu Horticulture Department
ShareTweetSendShare
Previous Post

ரஷ்யாவுக்கு படிக்க சென்ற மருத்துவ மாணவரை மீட்க பெற்றோர் கோரிக்கை!

Next Post

மரவள்ளிக்கிழங்குக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies