திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ரெட் டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
பயணியை ஏற்ற வந்த டாக்சி ஓட்டுநர் சக்திவேல் என்பவரை ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற சக டாக்சி ஓட்டுநர்கள், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.