கனமழை காரணமாக இமாச்சலப்பிரதேசத்தின் சக்கி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் காங்ரா மாவட்டம் இந்தோரா நகரில் ஆற்றின் குறுக்கே உள்ள ரயில்வே மேம்பாலத்தின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.
பாலத்தில் ரயில் சென்று கொண்டிருந்தபோது தடுப்புச் சுவர் இடிந்த நிலையில் பயணிகள் நூலிழையில் உயிர் தப்பினர்.